Monday 19 October 2020

 இரங்கல் கூட்டம். 

----------------------------

நெல்லை மாவட்டம் 

--------------------------------

  19.10.2020  திங்கள்கிழமை, GM அலுவலகத்தில் வைத்து மதியம் 01.00 மணியளவில்,AIBDPA மாவட்ட செயலர் தோழர் D. கோபாலன்  அவர்களுக்கு BSNLEU  சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.


          BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் N. சூசை மரியஅந்தோணி தலைமை தாங்கினார்.


          நெல்லை மாவட்ட TDM  கலந்து கொண்டு தோழர்  D.கோபாலன் அவர்கள்  படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.அதைத்தொடர்ந்து அனைத்து தோழர்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


           நமது AIBDPA மாநில உதவி தலைவர் தோழர் V. S. வேம்புராஜா, BSNLEU மாநில அமைப்பு செயலாளர் தோழர் V. சீதாலட்சுமி, TNTCWU மாவட்ட செயலாளர் தோழர் P. ராஜகோபால், அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல சங்க மாவட்ட செயலாளர் தோழர் பரமசிவன்,SNEA மாவட்ட செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், NFTE BSNL மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சாலன், TEPU  மாவட்ட செயலாளர் தோழர் சுகுமார் உட்பட பல மாவட்ட செயலாளர்கள் அஞ்சலி உரையாற்றினர். 


             நமது AIBDPA தோழர்கள் உட்பட பல அதிகாரிகள் ,ஊழியர்கள்,தோழமை சங்க தோழர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


             நிறைவாக AIBDPA  மாவட்ட தலைவர் தோழர் ச.முத்துசாமி அஞ்சலி நிறைவுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார். 






Saturday 17 October 2020

16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..

 16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..

ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்திற்காக பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கிய போதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 15% சம்பளம் கூட கிடைக்க பெறவில்லை.. 22.09.2020 அன்று நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் ஒப்பந்தகாரர்களின் பில் தொகைக்கான பணத்தை நிர்வாகம் தயாராக வைத்திருக்க வேண்டும்..இந்த தொகை நிலுவை சம்பளத்திற்கான தொகையை விட குறைவில்லாமல் இருக்க வேண்டும்..மறு உத்தரவு நீதிமன்றத்தால் வழங்கும் வரை ஒப்பந்தகாரர்களுக்கு பில் தொகை கொடுக்க கூடாது என்று சொல்லப்பட்ட பிறகும் கூட இன்றைய தேதி வரை நிர்வாகம் நிலுவை சம்பளத்தை கணக்கீடு செய்யவோ சொல்லப்பட்ட தேதியில் பணத்தை செலுத்தவோ முன்வரவில்லை..மீண்டும் இந்த முறையும் நிர்வாகம் 5 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்தார்கள்.. ஒப்பந்த தொழிலாளர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே வேலை செய்தமைக்கு சம்பளம் கிடைக்காமல் ஒப்பந்த தொழிலாளர்கள் மிக பெரிய துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.. சம்பள நிலுவை தொகை என்பது பல கோடி ரூபாய்களாக இருக்கிற காரணத்தால் ஒரு சிறப்பு எற்பாடு செய்து RLC நிலுவை தொகையை தொழிலாளர்களிடம் விசாரிக்க வேண்டும் அதற்கு பிறகு அந்த தொகையை நிர்வாகம் RLC யிடம் செலுத்த வேண்டும்.. முந்தைய இடைக்கால உத்தரவுகளும் தற்போதைய நிலைமைகளையும் கணக்கில் எடுத்து கொண்டு நிர்வாகம் நிலுவை தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மண்டல தொழிலாளர் ஆணையரிடம் செலுத்த வேண்டும்.. அதற்கு பிறகு அனைத்து தரப்பும் நிலுவை சம்பளத்தை பட்டுவாடா செய்வதற்கான செயல் முறையை கண்டறிய வேண்டும்.. இடைக்கால உத்தரவுகள் நிர்வாகம் அனைத்து ஒப்பந்தகாரர்களின் மொத்த பில் தொகையினை சரி பார்த்து அதில் 25% தொகையை மண்டல தொழிலாளர் ஆணையர் துவங்கப்பட வேண்டிய தனி வங்கி கணக்கான 'Contract Workers Wage Due WP 34513 ' என்ற வங்கி கணக்கில் 31.10.2020 குள் செலுத்த வேண்டும்.. மீதமுள்ள 25% நிலுவை தொகையை 20.11.2020 குள் Contract Workers Wage Due W.P 34513 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.. 50% நிலுவை தொகையை 20.12.2020 குள் Contract Workers Wage Due W.P 34513 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.. இந்த மாதம் இறுதிக்குள் செலுத்தப்படுகிற 25% நிலுவை தொகை என்பது தீபவளிக்கு முன்பு ஒரு பகுதி சம்பளத்தையாவது ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும்.. நிர்வாகம் நிலுவை தொகையை நீதிமன்றம் கொடுத்த கால கெடுவிற்குள் கறாராக செலுத்த வேண்டும்.. அடுத்த விசாரணை 05.11.2020 அன்று நடைபெறும்.. TNTCWU மாநில சங்கம்


இரங்கல் செய்தி.   
------------------------------        
          அருமைத் தோழரும்      AIBDPA வின் திருநெல்வேலி மாவட்டச் செயலருமான , தோழர் D.கோபாலன்அவர்கள்  திருநெல்வேலி
யில் இன்று (17-10-20 ) காலை காலமாகி விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

BSNLEU வின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், தற்போது பாரதிநகர் நலவாழ்வு சங்கத்தின் செயலாளராகவும் இருந்து திறம்பட செயலாற்றியவர். 

   அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

 அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 
02.00மணிக்கு சுந்தரபாண்டியபுரத்தில் வைத்து நடைபெற்றும்.

ஆழ்ந்த வருத்தத்துடன், 
P.ராஜகோபால் TNTCWU 
நெல்லை மாவட்டம்.

Friday 16 October 2020

தகவல் அறியும் உரிமைக்குழுவை

தகவல் அறியும் உரிமைக்குழுக்களை மத்திய மாநில சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் என செப்டம்பரில் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.   BSNL நிர்வாகத்திடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பல்வேறு தகவல்களை பெறுவது தான் இந்தக் குழுக்களின் பணி.  அவ்வாறு பெறும் தகவல்கள் மூலம், நமது சங்கம், நிர்வாகத்திடமும், அரசாங்கத்திடமும், பிரச்சனைகளை வலுவாக எழுப்ப இயலும்.
மத்திய செயற்குழுவின் இந்த முடிவையொட்டி, 09.10.2020ல் கூடிய அகில இந்திய மையக்கூட்டம், கீழ்கண்ட தோழர்களை கொண்ட அகில இந்திய தகவல் அறியும் உரிமைக்குழுவை உருவாக்கியுள்ளது: –
 (1)   தோழர்C.K.குண்டண்ணா, முன்னாள் கர்நாடக மாநில செயலர்.
(2) தோழர் மிஹிர்தாஸ் முன்னாள் AGS.
(3) தோழர் M.K.தவே, மத்திய சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர்.
இந்தக்குழுவின் அமைப்பாளராக தோழர் C.K.குண்டண்ணா  செயல்படுவார்.
மாநில தகவல் அறியும் உரிமைக்குழுக்களை, அனைத்து மாநிலங்களும் உடனடியாக உருவாக்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தோழர் P.அபிமன்யு
பொதுச்செயலாளர்

Wednesday 24 June 2020

26.06.2020 அன்று நடைபெறும் சமூக இடைவெளியுடன் கூடிய தர்ணா




26.06.2020 அன்று நடைபெறும் சமூக இடைவெளியுடன் கூடிய தர்ணா தொடர்பாக மாவட்ட/ மாநில செயலாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்

26.06.2020 அன்று சமூக இடவெளியுடன் கூடிய தர்ணா போராட்டத்தை நடத்திட வேண்டும் என BSNL ஊழியர் சஙத்தின் மாநில செயலகம் முடிவெடுத்துள்ளதை ஏற்கனவே தெரிவித்து உள்ளோம்.

BSNL
நிறுவனம் 4G சேவை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக்கற்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும்,

BSNL
ன் புத்தாக்கத்திற்கான நடவடிக்கைகளை அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும்,

BSNL
நிர்வாகத்தால், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஊழியர் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தியும்

இந்த தர்ணாவிற்கான அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் சக்தியாக நடைபெற வேண்டும். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்திட வேண்டும். பங்கு பெறும் தோழர்கள், முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். 5 முதல் 15 தோழர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். கோரிக்கை பலகைகளை வைத்திட வேண்டும். ஊடகங்களில் பிரசுரிக்கப்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்


Wednesday 10 June 2020




BSNLEU  தமிழ் மாநில துணை தலைவர் தோழர் K. மாரிமுத்து, அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் K.மாரிமுத்து அவர்கள் தொலைதொடர்பு துறையில் ஒன்று பட்ட NFTE சங்கத்தில் மஸ்தூர்களை உறுப்பினராக சேர்ப்பதற்கான போராட்டத்தில் இருந்து அவகளுடைய தொழிற்சங்க பணிகளை நான் அறிந்தவன். . அவர் இறப்பு எங்களை ஆழ்ந்த துயரப்படுத்தியுள்ளது..அவரை பிரிந்த அவர்கள் குடும்பத்தாருக்கும் BSNLEU தோழர்களுக்கும் திருநெல்வேலி மாவட்டச் சங்கத்திதின் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday 12 May 2020

தொடர் போராட்டம்.

ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய ஒப்பந்த முறைக்கு எதிராக தொடர் போராட்டம்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக BSNL நிறுவனத்தில் மிகக் குறைந்த ஊதியத்தில் கடுமையாக வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு விரட்டும் விதமாக புதிய டெண்டர் முறையை நிர்வாகம் அமல் படுத்தி வருகிறது. தமிழகத்தில் K.G.போஸ் அணி சங்கங்களால் உருவாக்கப்பட்ட தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்ட பின், BSNL ஊழியர் சங்கமும், தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் ஒன்றாக இணைந்து நடத்திய எண்ணற்ற போராட்டங்களால், தொழிலாளர் நல ஆணையர் நிர்ணயித்த ஊதியம், பஞ்சப்படி, EPF, ESI மற்றும் போனஸ் உள்ளிட்ட பல சலுகைகளை பெற்றோம். இதற்காக நாம் நடத்திய போராட்டங்கள் எத்தனை எத்தனை!

அப்படி போராடி பெற்ற பல சலுகைகளை எல்லாம் பறிக்கும் விதமாக தற்போது புதிய டெண்டர் முறை வந்துள்ளது. 

கொரோனா என்னும் பெருந்தொற்று உலைகையே அச்சுறுத்தி வரும் வேளையில், தங்கள் உயிரையும் பணயம் வைத்து, பத்து பதினைந்து மாதங்கள் ஊதியம் வராத நிலையிலும், இந்த ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றி வரும் சூழலில், சற்றும் இரக்கமின்றி அவர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் மாவட்ட மாநில நிர்வாகங்கள் செயல்பட்டு வருவதை இனியும் அனுமதிக்க முடியாது. 

பெருந்தொற்று தீரட்டும், நாம் நமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என காத்திருப்பதில் பயன் ஏதுமில்லை. பெருந்தொற்றின் தீங்கை விட நமது ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களில் உள்ள பசிக் கொடுமையின் தீங்கு அதிகம் என்ற அடிப்படையில் இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக போராடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

எனவே நாம் இந்த போராட்டங்களை பலமாக, சக்தியாக நடத்திடுவோம். 

BSNL தமிழ் மாநில / மாவட்ட நிர்வாகங்களின்
ஆணவங்களுக்கு எதிராக.. அராஜகங்களை முறியடித்திட..

1. 14.05.2020 கோரிக்கை அட்டை அணிதல்..

2. 15.05.2020 தர்ணா (கறுப்புத்துணியால் கண்களை மறைத்து)

3. 18.05.2020 கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்..

4. 20.05.2020 ஒப்பந்த தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு..

BSNL நிர்வாகமே..

1) ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சேவை பாதிப்பு மற்றும் ஊழல் வாய்ப்புக்கு வழிவகுக்கும் OUTSOURCING டெண்டரை அமுல்படுத்தாதே.. அமுலாக்கத்தை ரத்து செய்..

2) VRS -க்குப் பின்னர் ஆட்பற்றாக்குறை நிலவும் சமயத்தில் ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்காதே..

3) 10 முதல் 15 மாதங்கள் சம்பள நிலுவையை உடனே வழங்கிடு..பட்டினி போட்டு சாகடிக்காதே..

பல்லாண்டுகளாக உழைத்திட்ட நாங்கள் அடிமைகளா..
பெற்ற உரிமைகளை பறி கொடுக்கவோ..
உழைப்பாளர்களா.. பிச்சைக்காரர்களா..

அணி திரண்டு போராடுவோம்..

இரவும் முடியும்.. பொழுதும் விடியும்..

BSNLEU TNTCWU தமிழ் மாநிலச் சங்கங்கள்

Thursday 30 April 2020

வருமான வரி திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க கடைசி தேதி நீட்டிப்பு





BSNL ஊழியர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, வருமான வரி 

திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க கடைசி தேதி நீட்டிப்பு


வருமான வரி திட்டத்தில் சில சலுகைகளை அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து, வருமான வரித்திட்டத்தில் ஊழியர்கள் புதிய திட்டத்திலோ அல்லது பழைய திட்டத்திலோ வருமான வரி தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. எந்த திட்டத்தில் தொடர்கிறார்கள் என ஊழியர்கள் விருப்பம் தெரிவிக்க 28.04.2020 தான் கடைசி தேதி என கார்ப்பரேட் அலுவலகம் 20.04.2020 அன்று கடிதம் வெளியிட்டிருந்தது. நேரப்பற்றாக்குறையையும், கொரோனாவினால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையும் சுட்டிக்காட்டி, இதற்கான கடைசி தேதியை, குறைந்த பட்சம் ஒரு மாத காலமாவது நீட்டித்து அறிவிக்க வேண்டும் என BSNLஊழியர் சங்கம், கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள Sr.GM(Taxational) அவர்களுக்கு கடிதம் எழுதியது.

இதனை ஏற்றுக் கொண்ட கார்ப்பரேட் அலுவலகம், அந்த தேதியினை 3105.2020 வரை நீட்டித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்




அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்
உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ”மே” தின வாழ்த்துக்களை  திருநெல்வேலி மாவட்ட்ச  ங்கம் உரித்தாக்கிக் கொள்கிறது.

தோழர் S.செல்லப்பா பணி ஓய்வு பெறுகிறார்




தோழர் S.செல்லப்பா பணி ஓய்வு பெறுகிறார்

BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவரும், அகில இந்திய உதவி பொதுச்செயலாளருமான அருமை தோழர் S.செல்லப்பா 30.04.2020 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவரது பணி ஓய்வு காலம், இந்த மானுடம் சிறக்க செம்மையாய் அமையட்டும் என நெல்லை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.













Monday 20 April 2020

Food materials distributed to contract workers in Tirunelveli, Virudhunagar and Madurai districts of Tamil Nadu circle.

View File
Food materials were distributed to contract workers in Tirunelveli, Virudhunagar and Madurai districts of Tamil Nadu circle on 17.04.2020. At Palayamkotai (Tirunelveli SSA) food materials worth Rs.1,000/- were distributed to each of the 50 contract workers. Com.V.Seethalakshmi, COS, BSNLEU, Com.D. Gopalan, DS, AIBDPA and Com.P.Rajagopal, DS, TNTCWU, were present. In Madurai, food materials worth Rs.700/- were distributed to each of the 30 contract workers. Com.C. Selvin Sathyaraj, DS, BSNLEU, Com.Manuel Palraj, DS, AIBDPA and Com.Sonaimuthu, DS, TNTCWU, were present. In Sivakasi (Virudhunagar SSA), relief materials worth Rs.1,000/- each were distributed to the contract workers. Com.A. Samuthrakani, DS, BSNLEU, Com.M.Ayyasami, DS, AIBDPA and Com.M.Muthusami, DS, TNTCWU, participated in the programme.    CHQ heartily congratulates all these district unions.

[Date : 18 - Apr - 2020]

BSNL Employees Union (CHQ), New Delhi





BSNL Employees Union (CHQ), New Delhi

calendar 20 - Apr - 2020
BSNLEU demands the sanctioning of one day's salary to all BSNL employees..

Since telecommunication is an essential service, the employees of BSNL are engaged in providing service to the people, despite a nationwide lock-down has been imposed. To ensure that they do not contract the infection of Corona Virus, BSNL employees need to use masks, gloves, sanitizer, liquid soap, etc. on a daily basis. They are spending money from their pockets for this. BSNLEU has demanded that, the BSNL Management should immediately sanction one day's salary (Basic Pay +DA) to all the BSNL employees, to enable them to meet the expenditure for purchasing the above items. BSNLEU has informed the Management that the other Public Sector Enterprises, viz., LIC of India, State Bank of India and the Union Bank of India have already sanctioned such a lumpsum grant.

Monday 6 April 2020

ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களை பட்டினியில் இருந்து பாதுகாப்போம்



நாடு முழுவதும் BSNLல் உள்ள 40,000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, கடந்த பத்து மாதங்களில் இருந்து 14 மாதங்கள் வரை ஊதியம் தராத அவல நிலை தொடர்கிறது.  நிறுவனத்தின் நிதி நிலையினை காரணம் காட்டி கார்ப்பரேட் அலுவலகம் அவர்களுக்கான நிதியினை ஒதுக்க அக்கறை எடுப்பதில்லை.
இந்த பிரச்சனை பாராளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.  ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தர வேண்டிய பொறுப்பு ஒப்பந்தக்காரர்களுக்கு தான் உள்ளது என்றும், BSNL நிர்வாகத்தின் பொறுப்பு இல்லை என்று பாராளுமன்றத்தில், மத்திய அமைச்சர் பதில் அளிக்கிறார்.  ஒப்பந்தக் காரர்களின் பில்களை BSNL நிர்வாகம் தீர்வு காணாமல், அவர்கள் எவ்வாறு ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தருவார்கள்?  மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் கூட தராமல், அவர்களை பெரும் எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்கிறது.  நிர்வாகத்தின் இந்த பாரபட்சமான, பொறுப்பற்ற தன்மை காரணமாக இதுவரை பத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இது போன்ற சம்பவங்கள், இந்திய நாட்டின் எந்த ஒரு பொதுத்துறையிலும் இதுவரை நடைபெற்றதில்லை.  இந்த பத்து மரணங்களுக்கும், அரசாங்கமும், BSNL நிர்வாகமுமே பொறுப்பாகும்.
அரசாங்கம் விடுத்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு என்பது இவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.  இதனால் மேலும் தற்கொலைகள் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் எழுகிறது.  எனவே, இந்த ஊரடங்கு காலத்தில், இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட தேவையான நிதியினை திரட்டிட BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது.  ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவி செய்திட தேவையான நிதியினை நிரந்தர ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றோர்களிடம் திரட்டிட BSNL ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
பல மாநிலங்கள் இந்த நிதியினை திரட்டிட அக்கறையுடன் முயற்சி செய்து வருகின்றன.  அதற்கு அனைவரின் மத்தியிலும் நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது.  ஆனால் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.  எனவே நன்கொடை வசூலை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.  நாம் ஒவ்வொருவரையும் அணுக வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் பட்டினியில் இருந்தும் தற்கொலைகளில் இருந்தும் காப்பாற்ற வேண்டியது நமது கடமையாகும்.  எனவே, ஒப்பந்த ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் காப்பாற்ற தாராளமாக நிதியுதவி செய்திட வேண்டும் என ஊழியர்களையும், நல விரும்பிகளையும் BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.


ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு தமிழகத்தில் 04.04.2020 அன்று திரண்ட நிதி விவரம்
’ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு04.04.2020 அன்று தமிழகத்தில் நமது மாவட்ட சங்கங்கள் திரட்டிய நிதியின் விவரத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.. நிதி வழங்கிய தோழர்களுக்கும், அதற்கான பெரு முயற்சி எடுத்துவரும் மாவட்ட சங்கங்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். இன்னமும் அதிகமான நிதியினை திரட்டிடுவோம்.

ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு தமிழகத்தில் 05.04.2020 அன்று திரண்ட நிதி விவரம்



ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு தமிழகத்தில் 05.04.2020 அன்று திரண்ட நிதி விவரம்
ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு 05.04.2020 அன்று தமிழகத்தில் நமது மாவட்ட சங்கங்கள் திரட்டிய நிதியின் விவரத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.. நிதி வழங்கிய தோழர்களுக்கும், அதற்கான பெரு முயற்சி எடுத்துவரும் மாவட்ட சங்கங்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. பெருமளவில் நிதி திரட்டப்பட்டிருந்தாலும், அது ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் உள்ளது.

Friday 3 April 2020

’ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி”





’ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி”
அன்பார்ந்த தோழர்களே,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதிய பிடித்தம் இல்லாமல் அனைத்து நிறுவனங்களும் முழு ஊதிய வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், நமது BSNLல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8 முதல் 14 மாதங்கள் வரை ஊதியம் தராமல் உள்ள நிலை தொடர்கிறது. 

கொரோனா பாதிப்பின் காரணமாக மேலும் பாதிப்படைந்துள்ள, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்து அதற்கான நிதியினை திரட்ட அறைகூவல் விடுத்துள்ளது. ஒரு குறுகிய கால இடைவெளியில் நமது தமிழகத்தில் இதுவரை 1,57,333 ரூபாய்கள் நிதியாக குவிந்துள்ளது. இதற்காக நிதி உதவி அளித்திட்ட அனைவருக்கும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மாவட்ட சங்கங்களுக்கும், குறிப்பாக நெல்லை மாவட்ட சங்கத்திற்கும், வழி காட்டியுள்ள பல்லடம் கிளை சங்கத்திற்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். 

ஆனால் இன்னமும் ஒரு சில மாவட்டங்கள் தங்கள் கணக்கை துவங்க கூட இல்லை. அனைத்து மாவட்டங்களிலும், தங்களின் முழு சக்தியை திரட்டி வசூலிக்க வேண்டி உள்ளது. விரைவாக செய்ய வேண்டிய பணி இது. ஊரடங்கு என்கிற தடை நம்முன் உள்ளது. தடைகளை தகர்த்தெறிந்து எப்போதும் முன்னேறி வரும் நாம், இந்த தடையையும் தாண்டி நமது தோழர்களின் நலன்களுக்காக உடனடியாக நிதி திரட்டிடுவோம். 

நமது ஊழியர்கள், நம்முடன் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தோழர்கள், அதிகாரிகள் மற்றும் அனைவரிடமும் நாம் இதற்கான நிதியினை பெற்று அந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விரைவில் உதவிடுவோம்..

ஒப்பந்த தொழிலாளர் நிவாரண நிதிக்கு





ஒப்பந்த தொழிலாளர் நிவாரண நிதிக்கு 01.04.2020 மாலை 06.00 மணி வரை வந்த நிதி
’ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு மாலை 6 மணி வரை வந்துள்ள நிதி விவரம்:-
முன் வரவு 65,333
தோழர் S.அஸ்லாம் பாஷா DS BSNLEU திருச்சி 2,500
தோழர் V.ரவி Retd TT ஈரோடு 1,000
தோழர் K.பழனிக்குமார் COS BSNLEU மதுரை 3,000
தோழர் P.ராஜகோபால் ADS BSNLEU நாகர்கோவில் 1,000
தோழர் P.ராஜு DS BSNLEU நாகர்கோவில் 1,000
தோழர் P.A.ராஜா முகமது BS சங்கரன் கோவில் நெல்லை 2,000
தோழர் அய்யப்ப ராஜா JE புளியங்குடி நெல்லை 1,000
தோழர் அருண் JE சங்கரன் கோவில் நெல்லை 1,000
தோழர் E.நடராஜன் ADS BSNLEU திருநெல்வேலி 2,000
தோழர் S.K.மாரியப்பன் Retd OS திருநெல்வேலி 2,000
தோழர் மகேஷ் DOS BSNLEU திருநெல்வேலி 1,000
தோழர் D.கிறிஸ்டோபர் ராஜதுரை Retd JE திருநெல்வேலி 2,000
தோழர் V.ராமநாதன் Retd TT திருநெல்வேலி 1,000
தோழர் R.தமிழ்செல்வி த/பெ C.ராமசந்திரன் கும்பகோணம் 1,000
தோழர் R.ராஜேஸ்வரி, க/பெ C.ராமசந்திரன் கும்பகோணம் 1,000
தோழர் R.சுயம்புலிங்கம் ADS BSNLEU நாகர்கோவில் 1,000
தோழர் கணேசன் DVP BSNLEU திருநெல்வேலி 1,000
கோவை மாவட்டம் பல்லடம் கிளை 21,500
தோழர் K.ஜார்ஜ் DP BSNLEU நாகர்கோவில் 2,000
தோழர் M.மல்லிகா Retd JTO புதுக்கோட்டை திருச்சி 5,000
தோழர் P.சின்னதுரை நாகர்கோவில் 1,000
தோழர் S.பிரதீப் குமார் நாகர்கோவில் 1,000
தோழர் V.ஞானமணி பூதபாண்டி நாகர்கோவில் 1,000
தோழர் B.சுப்ரமணியன் Retd OS நாகர்கோவில் 2,000
தோழர் செல்வராஜ் Retd OS நாகர்கோவில் 2,000
தோழர் I.அந்தோணி மைக்கேல் OS நாகர்கோவில் 1,000
தோழர் S.சுகுமார் நாகர்கோவில் 1,000
தோழர் அபிராம சுந்தரி,OS சேலம் 3,000
தோழர் T.பிரேமா CVP BSNLEU சென்னை 2,000
தோழர் பூம்பாவை Retd OS புதுக்கோட்டை, திருச்சி 2,000
தோழர் A.குருசாமி TT சிவகாசி 3,000
தோழர் A.சுப்ரமணியன் DS BSNLEU பாண்டிச்சேரி 1,000
தோழர் A.P. கலாராணி OS பாண்டிச்சேரி 3,000
தோழர் V.ராமகிருஷ்ணன் Retd SDE பாண்டிச்சேரி 2,000
தோழர் M.நாசர்தீன் BS BSNLEU தென்காசி நெல்லை 1,000
தோழர் கோமதி நாயகம் TT சங்கரன்கோவில் நெல்லை 1,000
தோழர் S.கந்தம்மாள் BT BSNLEU சங்கரன் கோவில் நெல்லை 1,000
தோழர் M.முத்தையா Retd AO திருநெல்வேலி 3,000
தோழர் S.குத்தாலிங்கம் DOS BSNLEU திருநெல்வேலி 1,000
தோழர் T.செந்தில்குமார் DOS BSNLEU திருநெல்வேலி 1,000
தோழர் P.சூசை DVP BSNLEU திருநெல்வேலி 1,000
தோழர் S.P.கணேசன் BS BSNLEU AMBAI திருநெல்வேலி 1,000
தோழர் அருட்பெருஞ்சோதி DP BSNLEU கும்பகோணம் 2,000
தோழர் சற்குணவதி கனகசபை BSNL WWCC கடலூர் 2,000
மொத்தம் 1,57,333/-



It is very sorry to inform you that Sri.V.Raju ITS, previous CGM TN CIRCLE passed away yesterday due to severe heart attack.

Friday 27 March 2020

BSNLஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம்



COVID-19 வெகு வேகமாக பரவுகிறது- LIC ப்ரீமியம்களை மேலும் காலதாமதமின்றி செலுத்த வேண்டும் என BSNLஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம்

2019, மே மாதம் முதற் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட LIC ப்ரீமியம்களை, BSNL நிர்வாகம் LICயில் செலுத்தாமல் இருந்தது. விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களின் தவணைகள் LICயிடம் செலுத்தப்பட்டிருந்தாலும், பணியில் உள்ள ஊழியர்களின் தவணைகள் இன்னமும் செலுத்தப்படவில்லை. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை கணக்கில் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட LIC தவணைகளை உடனடியாக அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.


ஒப்பந்த ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு கடிதம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய இழப்பை சந்தித்துவிடக்கூடாது என வழிகாட்டி தொழிலாளர் நல மற்றும் நிதி அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள கடிதங்களின் பின்னணியில், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பத்து மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.


Monday 23 March 2020






Respectful homage to comrades Bhagat Singh, Sukhdev and Rajguru – Revolutionary greetings to all on Martyrdom day.

Today is the "Martyrdom Day" of comrades Bhagat Singh, Sukhdev and Rajguru. BSNLEU pays it's respectful homage to these great heroes of Indian freedom struggle and conveys revolutionary greetings to all the comrades. BSNLEU resolves to follow their footsteps, in the fight against all injustices.

நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்
நிரந்தர ஊழியர்களின் 2020, பிப்ரவரி மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றும், 2020, மார்ச் மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்ற்BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.

நினைவாஞ்சலி


வர்க்க போராளி தோழர். எம். முருகையா முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி
BSNL ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த தோழர் முருகையா அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி





Tuesday 4 February 2020

BSNL வரலாற்றில் 31.01.2020, ஒரு கருப்பு தினம்




BSNL வரலாற்றில் 31.01.2020, ஒரு கருப்பு தினம்
BSNL வரலாற்றில் 31.01.2020 என்பது ஒரு கருப்பு தினம். விருப்ப ஓய்வு திட்டம்-2019ன் கீழ் 78,459 ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். BSNLன் புத்தாக்கம் என்ற பெயரில் இது நடைபெற்றுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் BSNL, மீண்டெழும் என்று தம்ப்பட்டம் அடிக்கப்பட்டது. எனினும், புத்தாக்கத்திட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் முடிவடைந்து விட்ட போதும், BSNL நிறுவனத்தால் 4G சேவையை இன்னமும் வழங்க இயலவில்லை. இன்னமும், ஊழியர்களுக்கு, குறிப்பாக விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு கூட ஊதியம் தர BSNLல் பணம் இல்லை. BSNL, அரசாங்கத்தின் மிக முக்கியமான சொத்து என்று அமைச்சர் கூறுகின்ற போதும், மற்ற பொதுத்துறைகளில் நடப்பது போலவே, BSNLஐ தனியார் மயமாக்கிடவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீண்டும் BSNL நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றி, BSNLஐ தனியார் மயமாக்கும் அரசின் முயற்சிகளை பின்னுக்கு தள்ளுவதே நமது பிரதான கடமை.

LICயின் பங்குகலை விற்பனை




LICயின் பங்குகலை விற்பனை செய்வதில் நரேந்திர மோடி அரசாங்கம் தனது முடிவை தெரிவித்துள்ளது.
01.02.2020 அன்று பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் திருமிகு நிர்மலா சீதாராமன், இந்த நிதி ஆண்டில் LICயின் பங்குகளை அரசு விற்பனை செய்யும் என்று அறிவித்தார். இது ஒரு மிக கொடூரமான முடிவு. LIC என்பது இந்திய அரசாங்கத்தின் மதிப்பு மிக்க ஆயுள் காப்பீட்டு நிறுவனம். அது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. இருந்த போதும், இந்திய நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் பேராசையின் காரணமாக, மத்திய நரேந்திர மோடி அரசாங்கம் LICயையும் தனியார் மயப்படுத்த முடிவு செய்துள்ளது. பங்கு விற்பனை என்பது தனியார்மயத்தின் துவக்கமே. ஏர் இந்தியா மற்றும் BPCL ஆகியவற்றின் தனியார்மயமாக்கலை ஒட்டியே அரசு, இந்த முடிவுகுக்கும் வந்துள்ளது. BSNLன் பங்கு விற்பனை மற்றும் தனியார் மயமாக்கல் வெகு தொலைவில் இல்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகின்றது. LICயின் பங்கு விற்பனை செய்யும் அரசின் முடிவை BSNL ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கின்றது. LICயின் பலம் பொருந்திய அமைப்பான AIIEA, வேலை நிறுத்தம் உள்ளிட்ட எதிர்ப்பு இயக்கங்களை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள BSNLஊழியர் சங்கத்தின் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும், AIIEAவின் அனைத்து இயக்கங்களுக்கும் தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.