Tuesday 4 February 2020

LICயின் பங்குகலை விற்பனை




LICயின் பங்குகலை விற்பனை செய்வதில் நரேந்திர மோடி அரசாங்கம் தனது முடிவை தெரிவித்துள்ளது.
01.02.2020 அன்று பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் திருமிகு நிர்மலா சீதாராமன், இந்த நிதி ஆண்டில் LICயின் பங்குகளை அரசு விற்பனை செய்யும் என்று அறிவித்தார். இது ஒரு மிக கொடூரமான முடிவு. LIC என்பது இந்திய அரசாங்கத்தின் மதிப்பு மிக்க ஆயுள் காப்பீட்டு நிறுவனம். அது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. இருந்த போதும், இந்திய நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் பேராசையின் காரணமாக, மத்திய நரேந்திர மோடி அரசாங்கம் LICயையும் தனியார் மயப்படுத்த முடிவு செய்துள்ளது. பங்கு விற்பனை என்பது தனியார்மயத்தின் துவக்கமே. ஏர் இந்தியா மற்றும் BPCL ஆகியவற்றின் தனியார்மயமாக்கலை ஒட்டியே அரசு, இந்த முடிவுகுக்கும் வந்துள்ளது. BSNLன் பங்கு விற்பனை மற்றும் தனியார் மயமாக்கல் வெகு தொலைவில் இல்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகின்றது. LICயின் பங்கு விற்பனை செய்யும் அரசின் முடிவை BSNL ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கின்றது. LICயின் பலம் பொருந்திய அமைப்பான AIIEA, வேலை நிறுத்தம் உள்ளிட்ட எதிர்ப்பு இயக்கங்களை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள BSNLஊழியர் சங்கத்தின் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும், AIIEAவின் அனைத்து இயக்கங்களுக்கும் தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment