Showing posts with label ஒரு கருப்பு தினம். Show all posts
Showing posts with label ஒரு கருப்பு தினம். Show all posts

Tuesday, 4 February 2020

BSNL வரலாற்றில் 31.01.2020, ஒரு கருப்பு தினம்




BSNL வரலாற்றில் 31.01.2020, ஒரு கருப்பு தினம்
BSNL வரலாற்றில் 31.01.2020 என்பது ஒரு கருப்பு தினம். விருப்ப ஓய்வு திட்டம்-2019ன் கீழ் 78,459 ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். BSNLன் புத்தாக்கம் என்ற பெயரில் இது நடைபெற்றுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் BSNL, மீண்டெழும் என்று தம்ப்பட்டம் அடிக்கப்பட்டது. எனினும், புத்தாக்கத்திட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் முடிவடைந்து விட்ட போதும், BSNL நிறுவனத்தால் 4G சேவையை இன்னமும் வழங்க இயலவில்லை. இன்னமும், ஊழியர்களுக்கு, குறிப்பாக விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு கூட ஊதியம் தர BSNLல் பணம் இல்லை. BSNL, அரசாங்கத்தின் மிக முக்கியமான சொத்து என்று அமைச்சர் கூறுகின்ற போதும், மற்ற பொதுத்துறைகளில் நடப்பது போலவே, BSNLஐ தனியார் மயமாக்கிடவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீண்டும் BSNL நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றி, BSNLஐ தனியார் மயமாக்கும் அரசின் முயற்சிகளை பின்னுக்கு தள்ளுவதே நமது பிரதான கடமை.