Wednesday 24 June 2020

26.06.2020 அன்று நடைபெறும் சமூக இடைவெளியுடன் கூடிய தர்ணா




26.06.2020 அன்று நடைபெறும் சமூக இடைவெளியுடன் கூடிய தர்ணா தொடர்பாக மாவட்ட/ மாநில செயலாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்

26.06.2020 அன்று சமூக இடவெளியுடன் கூடிய தர்ணா போராட்டத்தை நடத்திட வேண்டும் என BSNL ஊழியர் சஙத்தின் மாநில செயலகம் முடிவெடுத்துள்ளதை ஏற்கனவே தெரிவித்து உள்ளோம்.

BSNL
நிறுவனம் 4G சேவை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக்கற்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும்,

BSNL
ன் புத்தாக்கத்திற்கான நடவடிக்கைகளை அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும்,

BSNL
நிர்வாகத்தால், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஊழியர் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தியும்

இந்த தர்ணாவிற்கான அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் சக்தியாக நடைபெற வேண்டும். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்திட வேண்டும். பங்கு பெறும் தோழர்கள், முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். 5 முதல் 15 தோழர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். கோரிக்கை பலகைகளை வைத்திட வேண்டும். ஊடகங்களில் பிரசுரிக்கப்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்


No comments:

Post a Comment