Monday 30 September 2019

IDA increase w.e.f 01-10-2019 is 5.3%.





IDA increase w.e.f 01-10-2019 is 5.3%.

IDA increase from 1st October, 2019 is 5.3%. With this, the total IDA payable has increased to 152%, i.e., 146.7%+5.3% = 152%. Necessary order has to be issued by the DPE.

[Date : 30 - Sep - 2019]

உரிய தேதியில் ஊதியம் வழங்கக் கோரி 01.10.2019 ஆர்ப்பாட்டம்





உரிய தேதியில் ஊதியம் வழங்கக் கோரி 01.10.2019 ஆர்ப்பாட்டம்
உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 01.10.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட அகில இந்திய UAB அறைகூவலை ஒட்டி தமிழ் மாநில UAB சங்கங்கள் விடுத்துள்ள அறைகூவல்

Friday 27 September 2019

நெல்லை GMO ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்



8 மாதம் சம்பளம் வழங்காத்தை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம் முதல் நாள்


நெல்லை GMO ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்💪








BSNL's revival back to square one..




BSNL's revival back to square one..

There was a lot of media publicity about the meeting held in the PMO yesterday, regarding the revival of BSNL and MTNL. The meeting has taken place and the new Cabinet Secretary, Shri P.K. Mishra, has presided over it. According to informed sources, nothing positive has emerged in yesterday’s PMO meeting. In fact, questions have been raised in that meeting, whether the revival of BSNL is necessary and if so, whether it is possible to revive BSNL? Similar negative questions have been raised in yesterday’s meeting and no meaningful decision has been taken. We have come to know that yesterday’s PMO meeting has appointed a Committee consisting of 4 / 5 Secretaries. This Committee will advise whether revival of BSNL is necessary, and if so, whether it is possible?

[Date : 27 - Sep - 2019]

Sunday 22 September 2019

7ஆவது முறையாக தொடர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது






சதிகளையும், துரோகங்களையும் மீறி BSNL ஊழியர் சங்கம் , 7ஆவது முறையாக தொடர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக நடைபெற்றுள்ள தேர்தலில், 7வது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரலாற்று சாதனையை மீண்டும் ஒரு முறையை BSNL ஊழியர் சங்கம் படைத்துள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும், சதிகளையும் துரோகங்களையும் தாண்டி இந்த மகத்தான வெற்றியை நமது சங்கம் பெற்றுள்ளது. BSNL நிறுவனத்தையும், அதன் ஊழியர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் ஒரே சங்கம் BSNL ஊழியர் சங்கம் தான் என பெரும்பாலான ஊழியர்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இந்த வெற்றி பறை சாற்றுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக, BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய, மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளும், முன்னணி ஊழியர்களும், TNTCWU மற்றும் AIBDPA தலைவர்களும் கடுமையாக செய்திட்ட தேர்தல் பணிகளின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. அத்தனை தோழர்களையும் தமிழ் மாநில சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
அனைத்திற்கும் மேலாக நமது சங்கத்தின் தலைமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாக்களித்து வரும் அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராடுதல்களையும், நன்றிகளையும் உரித்தக்கிக் கொள்கிறது.

Wednesday 18 September 2019





8ஆவது உறுப்பினர் சரி பார்ப்பு தேர்தல்- தமிழக முடிவுகள்

16.09.2019 அன்று நடைபெற்ற 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் தமிழகத்தில் பெற்ற வாக்குகள் விவரம்

மாவட்டம்                           BSNLEU                     NFTE
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை                            420                                                    286
கடலூர்                             130                                                    315
தர்மபுரி                              162                                                    47
ஈரோடு                              198                                                    241
காரைக்குடி                             29                                                 171
கும்பகோணம்                          62                                                   192
மதுரை                               325                                                     327
நாகர்கோவில்                         151                                                    55
நீலகிரி                               108                                                       30
பாண்டிச்சேரி                        68                                                      87
சேலம் 322 363
தஞ்சாவூர் 60 311
திருச்சி 206 379
தூத்துக்குடி 115 72
திருநெல்வேலி 156 219
விருதுநகர் 137 110
வேலூர் 129 505
CGM(O) 53 128

மொத்தம்                                    2831 (37.12%)                                        3838 (50.43%)


Monday 16 September 2019

திருநெல்வேலில் தேர்தல் வேலையில் தோழர்கள்


திருநெல்வேலில் தேர்தல் வேலையில்  தோழர்கள்






Tiruneloveli SSA 


 GMO  office total vote= 209.
Polling vote         = 197.
Vlo  total vote  =    56 .
Polling vote        =    53.
Asd total vote.  = 44.
Polling vote       =   43.
Tks total vote  =  70
Polling vote      =68.
Snl total vote =48.
Polling vote.    =48.

Total vote==427
Polling vote=409


Total  absent.   18


: BSNLயை பாதுகாக்க    ஊழியர் நலன் காக்க வாக்களித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி N. சூசை மாவட்டச்செயலர் BSNLEU நெல்லை

Sunday 15 September 2019

வாக்களிப்பீர் , தோழர்களே




BSNL ஊழியர்சங்கம்
ததிருநெல்வேலி மாவட்டம்

தோழர்களே, தோழியர்களே!
வணக்கம்.சிலவேண்டுகோள்களை உங்கள்பரிசீலனைக்காகமுன்வைக்கிறோம்.
1)
நாளை 16.09.2019 அன்று தவறாமல் வாக்களியுங்கள்
2)
வரிசை எண் 8ல் செல்போன்சின்னத்தில் முத்திரையிட்டு ஆதரவளியுங்கள்
கீழ்க்கண்ட  விவரங்களை நம்நண்பர்கள் மற்றும் தோழர்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
3)
இந்தத் தேர்தலில் ஒரே ஒர் சங்கம் மட்டுமே அங்கீகார சங்கமாக தேர்வு செய்யப்படும். அதுவே கொள்கை முடிவுகளை இறுதிசெய்யும்.
4)
உறுப்பினர் அடிப்படையில் BSNLEUவின் வெற்றி உறுதி. எனினும்
ஏன் செல் சின்னத்தில்வாக்களிக்கவேண்டும்?
5)  20 
வருடங்களாக BSNL ஒரு பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இது தொடரவேண்டும்.
6) BSNL
  பலவீனப்படுத்தும் துணைடவர் நிறுவனம் தடுக்கப்பட்டது.
7)
அதேபோல ஆட்குறைப்புத் திட்டங்களான VRS மற்றும்  CRS தடுக்கப்பட்டுள்ளது.
8)
சேவையை மேம்படுத்த பல திட்டங்கள்முன்மொழியப்பட்டு அமுலாக்கப்பட்டுள்ளது.
9) POINT  To POINT FIXATION  30%
சம்பளநிர்ணயம், 78.2 % பஞ்சப்படி இணப்பு ஆகியவற்றின் மூலம் திருப்திகரமான சம்பளம் பெறப்பட்டுள்ளது.
10)  4
கட்ட பதவி உயர்வின் மூலம் சம்பள உயர்வு பெறப்பட்டுள்ளது.
11)  
பதவி உயர்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் முன்னேற்றம்
பெற்றுள்ளனர்.
12)
பதவியின் பெயர்கள் மாற்றப்பட்டு மனநிறைவான பெயர்கள் பெறப்பட்டுள்ளன.
13)  
சங்கங்களுக்கு இடையேயான மனமாச்சரியம், முரண்பாடுகள்கலையப்பட்டு
AUAB
அமைப்பு உருவாக்கப்பட்டு இணைந்த போராட்டங்கள்
நடைபெற்றுள்ளன.
14)  SC/ST
ஊழியர்களின் உரிமைகள்நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு
வருகிறது.
15)
கேடர் வாரியான பிரச்சனைகளில் அக்கறையுடன் கூடிய தலையீடும், தீர்வும் உருவாக்கப்பட்டுள்ளது.
16)
அகில இந்திய அளவில் பெண்கள் அமைப்பு (BSNLWWCC)உருவாக்கப்பட்டு
அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
17)
இதர பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து அரசின் தொழிலாளர்
விரோதக் கொள்கைகளுக்கு எதிரான பொது வேலைநிறுத்தங்கள் BSNL ல்
வெற்றி கரமாக்கப்பட்டுள்ளது.
18)
ஒப்பந்த ஊழியர் நலனுக்காகதொடர் இயக்கங்கள்நடத்தப்பட்டு
முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
19)
தீண்டாமை ஒழிய, தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பில் இணைந்து
தொழிலாளர் ஒற்றுமை உருவாக்கப்பட்டுள்ளது.
20) BSNL
புத்தாக்கம் பெற புதிய கடன் வசதி ,அரசின் நிதி உதவி,
நிலப்பயன்பாட்டுக் கொள்கை ஆலோசனைகள் முன் மொழியப்பட்டுள்ளன.
21)
தேர்தல் வெற்றிக்குப்பின் இடையில் நிறுத்தப்பட்ட மூன்றாவது சம்பளப்
பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டுநல்லசம்பள உயர்வு பெற்றுத்தரப்படும்……

v பென்சன்மாற்றம் உத்திரவாதம் செய்யப்படும்,
v புதிய பதவி உயர்வுக்கொள்கை உருவாக்கப்படும்
v புதிய ஆளெடுப்பு வலியுறுத்தப்படும்
v நேரடி நியமன ஊழியர்களின் கோரிக்கைகள்அக்கறையுடன் தலையிட்டுத்
தீர்க்கப்படும்.

v ஓய்வு பெரும் வயது 60 என்பது உறுதிப்படுத்தப்படும்.
v தீர்க்கப்படாமலுள்ள கேடர் பிரச்சனைகள் தீர்க்க முன் கைஎடுக்கப்படும்.
v புதிய மருத்துவ காப்பீடு முழுபலன்களுடன் பெற்றுத் தரப்படும்.
v கூடுதல் கடன் வசதித்திட்டங்கள் பெற்றுத் தரப்படும்.
v சீரழிந்து கிடக்கும் சென்னை கூட்டுறவு சொசைட்டி சீரமைக்கப்படும். முறைகேடுகள் களையப்படும். தவறு செய்தவர்கள்தண்டிக்கப்படுவார்கள்.கடன் வசதி தொடரும், Closer, settlement  தலையீட்டுத் தீர்க்கப்படும்.
எனவே, நாளை 8ஆவது உறுப்பினர் சரிபார்ப்பில் BSNLEU சங்கத்திற்கு வரிசைஎன் 8ல் செல்போன்சின்னத்தில்வாக்களிக்கதோழமையுடன்வேண்டுகிறோம்.
நன்றி

தோழமையுடன் திருநெல்வேலி மாவட்டச்சங்கம்
(
தேர்தல்நேரம்:-காலை 09.00 மணிமுதல்மாலை 05.00மணிவரை)
வாக்களிப்போம் செல்போன் சின்னத்திற்கு!
வெற்றிபெறச்செய்வோம் BSNLEU வை.


Friday 13 September 2019






மதிவாணனின் அவதூற்றை புறந்தள்ளுவோம்




மதிவாணனின் அவதூற்றை புறந்தள்ளுவோம்






அன்பார்ந்த தோழர்களே,
நாம் சென்னை சொசைட்டியில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதால் NFTE சங்க தலைமையை, அதன் உறுப்பினர்களே கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். திருடனுக்கு தேள் கொட்டியது போல அவர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். NFTE கூட்டங்களில் நடுநாயகமாக சொசைட்டி தலைவரை உட்கார வைத்து பிரச்சாரம் செய்து வருகின்ற வேளையில், சேலம் மாவட்ட NFTE செயலாளர் சென்னை கூட்டுறவு சங்க தலமையோடு BSNLEU சங்கம் உடன்பாடு போட்டுள்ளது என்று கூசாமல் பொய் சொல்கிறார். இவருடைய புழுகினை அவரது தோழர்கள் கூட ஏற்க மாட்டார்கள்.
இவர் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார் என்றால், இவர் சார்ந்த NFTE சங்கத்தின் மூமூமூத்த துணைத்தலைவர், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மதிவாணன், முழுப்பூசனிக்காயை சோற்றுப்பருக்கைக்குள் மறைக்க பார்க்கிறார். அருவருக்கத்தக்க அவதூறுகளை பரப்பும் மதிவாணன் & கம்பெனி
பொய்யை பரப்புவதில் கோயபல்ஸ் போன்றவர் சென்னை NFTEஐ சார்ந்த மதிவாணன். சென்னை கூட்டுறவு சங்கத்தின் நிலங்களை உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்ததில் ஊழல் நடந்துள்ளது என சவுக்கு.காம் என்ற இணைய தள பத்திரிக்கை செய்தி வெளியிட்ட போது இவர் வாயை மூடிக்கொண்டிருந்தார். அந்த செய்தியினை தற்போது தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் எடுத்து சொன்னால் அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அதைப்போல சொல்லக் கூடிய பொய்யைக் கூட பொருந்த சொல்ல மதிவாணனால் முடியவில்லை. தன்னுடைய அடியாட்கள் மூலம் செல்லப்பாஸ்- அபிமன்யு கார்டன்ஸ்என்று ஒரு பயங்கரமான பெரிய கட்டிடத்தின் படத்தைப் போட்டு அதன் உரிமையாளர்கள் BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் என மறைமுகமாக சொல்வதை போல WHATSAPPல் அவதூறைப் பரப்புகிறார். அபிமன்யு செல்லப்பாஸ்என்ற அடுக்கு மாடி குடியிருப்பு பூனாவில் உள்ளதை இவர் கண்டு பிடித்துள்ளாராம். அது பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாம். இப்போது உண்மை விளங்கி விட்டதாம். கொலம்பஸ் இந்தியாவை கண்டு பிடிக்க புறப்பட்டு அமெரிக்காவை கண்டு பிடித்ததைப் போல மதிவாணன் கண்டு பிடித்திருக்கிறாராம். இவரது நோக்கம், நேர்மையின் உருவமான BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் மீதும், உதவி பொதுச்செயலாளர் தோழர் S.செல்லப்பா அவர்கள் மீதும் மாசு கற்பிப்பதுதான். பாவம், இதனை அவர்களின் சங்க தோழர்கள் கூட நம்ப மாட்டார்கள். இந்த இரண்டு தோழர்களின் நேர்மையையும், தூய்மையையும் பற்றி அனைவரும் அறிவார்கள். இதில் ஒரு துளி கூட உண்மையில்லை என்பதை உறுதியோடு சொல்வோம். அருவருக்கத்தக்க மதிவாணனின் இந்த அருவருப்பு அவதூறையும் அனைவரும் நிராகரித்து வருகின்றனர். ஆனால் மதிவாணனின் இந்த கேடுகெட்ட அவதூறிற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை தமிழ் மாநில சங்கம் கண்டிப்பாக எடுக்கும். ஊழல் சேற்றில் புரண்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மல்லிகையின் நறுமணம் தெரியாது. இந்த கேவலமான அவதூறுகளுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி தக்க பதிலடி கிடைக்கும்.


Wednesday 11 September 2019

இன்று 12.9.19 தேர்தல் பிரசார கூட்டம் நண்பகல் 1மணி GM அலுவலகம் நெல்லை மாலை 4.30மணிக்கு தென்காசி நமது மாநில செயலாளர் A. பாபுராதாகிருஷ்ணன் வரிசை எண் 8 செல்போன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் தோழமையுடன் N. சூசை மாவட்டச்செயலர் BSNLEU

Monday 9 September 2019

பொது மேலாளருடன் சந்திப்பு





 பொது மேலாளருடன் சந்திப்பு




அருமை தோழர்களே  மாலை 6/9/2019 ல்  நமது பொது மேலாளருடன் Bsnleu,  மாவட்ட செயலர் தலைமையில் Tntcwu  மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த மாதம் யாரைபும் வேலைநீக்கம் செய்வதில்லை என்றும் இந்த மாத இறுதியில் பேசி நல்ல தீர்வு காணப்படும் என்று பொது மேலாளர் தெரிவிதார்

            ராஜகோபான்ல் மாவட்ட செயலர் Tntcwu Tvl