Showing posts with label தொடர் போராட்டம்.. Show all posts
Showing posts with label தொடர் போராட்டம்.. Show all posts

Tuesday, 12 May 2020

தொடர் போராட்டம்.

ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய ஒப்பந்த முறைக்கு எதிராக தொடர் போராட்டம்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக BSNL நிறுவனத்தில் மிகக் குறைந்த ஊதியத்தில் கடுமையாக வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு விரட்டும் விதமாக புதிய டெண்டர் முறையை நிர்வாகம் அமல் படுத்தி வருகிறது. தமிழகத்தில் K.G.போஸ் அணி சங்கங்களால் உருவாக்கப்பட்ட தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்ட பின், BSNL ஊழியர் சங்கமும், தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் ஒன்றாக இணைந்து நடத்திய எண்ணற்ற போராட்டங்களால், தொழிலாளர் நல ஆணையர் நிர்ணயித்த ஊதியம், பஞ்சப்படி, EPF, ESI மற்றும் போனஸ் உள்ளிட்ட பல சலுகைகளை பெற்றோம். இதற்காக நாம் நடத்திய போராட்டங்கள் எத்தனை எத்தனை!

அப்படி போராடி பெற்ற பல சலுகைகளை எல்லாம் பறிக்கும் விதமாக தற்போது புதிய டெண்டர் முறை வந்துள்ளது. 

கொரோனா என்னும் பெருந்தொற்று உலைகையே அச்சுறுத்தி வரும் வேளையில், தங்கள் உயிரையும் பணயம் வைத்து, பத்து பதினைந்து மாதங்கள் ஊதியம் வராத நிலையிலும், இந்த ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றி வரும் சூழலில், சற்றும் இரக்கமின்றி அவர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் மாவட்ட மாநில நிர்வாகங்கள் செயல்பட்டு வருவதை இனியும் அனுமதிக்க முடியாது. 

பெருந்தொற்று தீரட்டும், நாம் நமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என காத்திருப்பதில் பயன் ஏதுமில்லை. பெருந்தொற்றின் தீங்கை விட நமது ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களில் உள்ள பசிக் கொடுமையின் தீங்கு அதிகம் என்ற அடிப்படையில் இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக போராடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

எனவே நாம் இந்த போராட்டங்களை பலமாக, சக்தியாக நடத்திடுவோம். 

BSNL தமிழ் மாநில / மாவட்ட நிர்வாகங்களின்
ஆணவங்களுக்கு எதிராக.. அராஜகங்களை முறியடித்திட..

1. 14.05.2020 கோரிக்கை அட்டை அணிதல்..

2. 15.05.2020 தர்ணா (கறுப்புத்துணியால் கண்களை மறைத்து)

3. 18.05.2020 கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்..

4. 20.05.2020 ஒப்பந்த தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு..

BSNL நிர்வாகமே..

1) ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சேவை பாதிப்பு மற்றும் ஊழல் வாய்ப்புக்கு வழிவகுக்கும் OUTSOURCING டெண்டரை அமுல்படுத்தாதே.. அமுலாக்கத்தை ரத்து செய்..

2) VRS -க்குப் பின்னர் ஆட்பற்றாக்குறை நிலவும் சமயத்தில் ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்காதே..

3) 10 முதல் 15 மாதங்கள் சம்பள நிலுவையை உடனே வழங்கிடு..பட்டினி போட்டு சாகடிக்காதே..

பல்லாண்டுகளாக உழைத்திட்ட நாங்கள் அடிமைகளா..
பெற்ற உரிமைகளை பறி கொடுக்கவோ..
உழைப்பாளர்களா.. பிச்சைக்காரர்களா..

அணி திரண்டு போராடுவோம்..

இரவும் முடியும்.. பொழுதும் விடியும்..

BSNLEU TNTCWU தமிழ் மாநிலச் சங்கங்கள்