Wednesday 4 September 2013




ஊழியர் விரோத பென்சன் மசோதா நிறைவேறியது : இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு
இடதுசாரிக் கட்சி களின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிய பென்சன் மசோ தாவை மன்மோகன் சிங் அரசு புதனன்று மக்கள வையில் நிறைவேற்றியது. இதன் மூலம் உத்தரவாதப் படுத்தப்பட்ட ஓய்வூதியத் திற்குப் பதிலாக ஊழியர் களின் ஓய்வூதியத்தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்து சூறையாட வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை நிறைவேற் றக்கூடாது என்று தொழி லாளர்களும் ஊழியர்களும் நாடு முழுவதும் போராட் டம் நடத்தி வந்த நிலையில், இந்த ஊழியர் விரோத மசோதா நிறைவேற்றப்பட் டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 என்று பெயரிடப்பட் டுள்ள இந்த மசோதா இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நீண்ட காலம் கிடப்பில் போடப் பட்டிருந்தது. 2005ம் ஆண் டிலிருந்தே இம்மசோ தாவை நிறைவேற்ற அரசு துடித்தது.
2005ம் ஆண்டில் மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த மசோதா 2011ம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட்டது.இந்த மசோதா ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற் றும் வளர்ச்சி ஆணையத் திற்கு சட்ட ரீதியான அதி காரங்களை அளிக்க வகை செய்கிறது. 2003ம் ஆண்டு இந்த ஆணையம் அமைக் கப்பட்டது. இது இடைக் கால ஆணையம்தான் என் றும் பிறகு சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்ப டும் என்றும் அப்போதைய பாஜக அரசு கூறியது.
ஆனால் நிர்வாக உத்தரவு மூலம் 2004ம் ஆண்டு முதல் இந்த ஆணையம் செயல் படுத்தப்பட்டு வந்தது. இந்த மசோதாவில் நாடாளுமன்ற நிலைக்குழு சில முக்கிய திருத்தங்களை கொடுத்திருந்தது. இந்த சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளதன் மூலம் ஓய்வூதிய நிதி நிறு வனங்களிலும் அந்நிய மூல தனம் 49 சதவிதம் அளவுக்கு அனுமதிக்கப்படும் அபா யம் உள்ளது. மேலும் ஓய் வூதிய நிதியில் முற்றாக அந் நியரை அனுமதிக்கவும் மன் மோகன் சிங் அரசு திட்ட மிட்டுள்ளது.
இம்மசோதாவை நிறை வேற்றுவதில் மன்மோகன் சிங் அரசு குறியாக இருந்த நிலையில், புதனன்று நாடா ளுமன்றத்தில் நிலக்கரி பங்குகள் தொடர்பான கோப்புகள் மாயமான விவ காரம் வெடித்தது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தால் இம் மசோதா அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில், மார்க் சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், திமுக, திரிணா முல் காங்கிரஸ், சமாஜ் வாதிக் கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பங்குச்சந்தையில் ஓய்வூ திய நிதியை முதலீடு செய் வது மற்றும் அந்நியரை அனுமதிப்பதற்கு உறுப்பி னர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். அவையில் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் அவசர அவசரமாக இம்மசோ தாவை நிறைவேற்றக் கூடாது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். விவாதத்திற்கு பதிலளித் துப்பேசிய ப.சிதம்பரம் நாடாளுமன்ற நிலைக்குழு வின் பெரும்பாலான திருத் தங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறினார்.
இம்மசோதா நிறைவேற்றப் படுவதால் ஊழியர்கள் பல னடைவார்கள் என்று கூறிய அவர், உறுதிப்படுத்தப் பட்ட ஓய்வூதியத்திற்கு ஆபத்து இருக்காது என்றார். பின் னர் இம்மசோதா அவை யில் நிறைவேற்றப் பட்டது.

No comments:

Post a Comment