Saturday 18 April 2015






பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்கள் ஏப்.21,22ல் வேலைநிறுத்தம்


திருநெல்வேலி,ஏப்.18-இரண்டு நாள் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் நெல்லை மாவட்டத்தில் 800பேர் பங்கேற்க உள்ளனர் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.பிஎஸ்என்எல் அதிகாரி,ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் வருகிற 21,22ம்தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நெல்லையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சூசை மரிய அந்தோணி, எஸ்என்இஏ சங்க அகில இந்திய இணைசெயலாளர் முத்து, என்எப்டிஇ சங்க மாவட்ட செயலாளர் கணேசன், ஏஐபிஎஸ்என்எல் இஏ சங்க மாவட்டச் செயலாளர் முகமது எகியா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது கூறிய அவர்கள் பிஎஸ்என்எல்-ஐ பாதுகாக்க ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் இணைந்து வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் இரண்டரை லட்சம்ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்பார்கள். தமிழகத்தில் 20 ஆயிரம் ஊழியர்களும், அதிகாரிகளும், நெல்லை மாவட்டத்தில் 800 ஊழியர்களும், அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்றனர்.
Theekkathir



No comments:

Post a Comment