Thursday 30 May 2013

என் நெஞ்சைத் தொட்ட புத்தகம் -பிரகாஷ் காரத் (தீக்கதிர்)

என் நெஞ்சைத் தொட்ட புத்தகம்
-பிரகாஷ் காரத்
‘‘தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய ‘‘சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு’’என்னும் புத்தகத்தை வெளியிடு மாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தால் வெளி யிடப்பட்டிருக்கிறது. பொதுவாக புத்தக வெளி யீட்டாளர்களே புத்தகத்தை வெளியிடும் நிகழ் வில் கலந்துகொள்வதில்லை. எனினும் இப்புத் தகத்தின் உள்ளடக்கம் என் நெஞ்சை மிகவும் தொட்டுவிட்டதால் நான் இதனை வெளியிட ஒப்புக்கொண்டேன்.

நான் பார்த்த, படித்த புத்தகங்களிலேயே இந்தப் புத்தகம்தான் சென்னை மாநகரத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தைக் குறித்துப் பேசிடும் முதல் புத்தகமாகும். இப்புத்தகத்தில் 1918க்கும் இரண்டாம் உலகப்போர் துவங்கும் காலம் 1939க்கும் இடையிலான காலகட்டத் தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

தோழர் திலீப் வீரராகவன் சென்னை மாந கரத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்ப கால கட்டங்கள் குறித்தும், சென்னை மாநக ரத்தில் தொழிற்சாலைகளும் தொழிலாளர் களும் உருவான பின்னணி குறித்தும் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.

1918இல் மதராஸ் லேபர் யூனியன் அமைக் கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதலாவ தாகப் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக மத ராஸ் லேபர் யூனியன்தான் கருதப்படுகிறது. மதராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருக்கமாக ‘பின்னி’ என்று அழைக்கப்படும் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் ஆலையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. சென்னை மாநகரில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலை இது. இவ்வாலை 1980களில் முற்பகுதியில் மூடப்பட்டது. 1918இலிருந்து ‘பின்னி’ ஆலை தான் சென்னை மாநகரில் தொழிற்சங்க இயக் கத்தின் மையமாக இருந்திருக்கிறது. பம்பாய் மற்றும் கல்கத்தா மாநகரங்களோடு ஒப்பிடும் போது, அங்கேஇருந்த அளவிற்குத் தொழிற் சாலைகள் நிறைந்த நகரமாக சென்னையைச் சொல்ல முடியாது. பிரிட்டிஷார், சென் னையை தங்களுடைய அரசியல், நிர்வாகம் மற்றும் வர்த்தக மையமாகத்தான் நீடிக்க வேண்டும் என்று விரும்பியதால், இங்கே தொழிற்சாலைகள் திறக்கப்படுவதை அவர் கள் ஊக்குவிக்கவில்லை. டெக்ஸ்டைல்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சில இன்ஜினியரிங் தொழில்பிரிவுகள், டிராம், பஸ் போக்குவரத்து ஆகியவைதான் இங்கே இருந் திருக்கின்றன. இவை குறித்து இப்புத்தகத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, அங்கே தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வளர்ந்த தையும் வீரராகவன் மிகவும் நன்றாகக் குறிப் பிட்டிருக்கிறார்.

மதராஸ் லேபர் யூனியன் எவரும் எதிர் பார்க்க முடியாத பின்புலத்திலிருந்து வந்துள்ள மக்களால் தொடங்கப்பட்டது. இந்த சங் கத்தைத் துவங்கிய தலைவர்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவர் ஒரு மத நிறு வனத்தை நடத்தி வந்தவராவார். அவரது பெயர் ஜி. செல்வபதி செட்டியார். அவர் தன்னுடைய மதநிறுவன வளாகத்திலேயே ஓர் அரிசிக் கடையும் வைத்திருந்தார். தொழிலாளர்கள் அவரது கடைக்குச் சென்று அரிசியும், அதற்கு அடுத்த கடையில் எண்ணெய்யும், அதற்கு அடுத்ததாக இருந்த கடையில் துணிமணி களும் வாங்கிச் செல்வது வழக்கம். இக்கடை களின் உரிமையாளர்கள் என்ற முறையில் இங்கே கடை வைத்திருந்த இவர்களுக்குத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்தும், அவர் களின் பிரச்சனைகள் குறித்தும் தெரியும். இவர்கள்தான் மதராஸ் லேபர் யூனியன் தொடங்குவதற்கும் கருவிகளாக இருந்திருக் கின்றனர். உண்மையில் தோழர் வீரராகவன் மேற்படி செல்வபதி செட்டியாரை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார். மேற்படி செல்வபதி செட்டியார் 1985 வரை வாழ்ந்திருக்கிறார்.

மதராஸ் லேபர் யூனியன் உதயமானதை அடுத்து அது சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழி லாளர்கள் மத்தியிலும் சங்கங்கள் தொடங்கு வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது.

தோழர் வீரராகவன் இந்தப் புத்தகத்தில் ‘பின்னி’யில் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் குறித்து நன்கு விளக்கியிருக்கிறார். மேலும் இப்புத்தகத்தில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்தும் விவரித்திருக்கிறார்.

சென்னையில் அப்போது ரயில்வே கம் பெனி ஒன்று உருவாகி இருக்கிறது. மதராஸ் மற்றும் தெற்கு மராத்தா என்று பெயரிடப்பட் டிருந்த அந்த ரயில்வே கம்பெனியில் இரண் டரை மாதங்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் நடைபெற்றிருக்கிறது. அந்த சமயத் தில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய வீரஞ் செறிந்த வேலைநிறுத்தம் குறித்து வீரராகவன் மிகவும் அருமையான சித்திரத்தை வழங்கி யிருக்கிறார்.

தொழிற்சங்க இயக்கத்தை செல்வபதி மற்றும் சுயாட்சி இயக்கத்தை (ழடிஅந சுரடந ஆடிஎநஅநவே) சேர்ந்த பல தலைவர்கள் தலை மையேற்று நடத்தி இருக்கின்றனர். சென் னைதான் இந்திய பிரம்மஞான சங்கத்திற்கும், அன்னி பெசண்ட் அம்மையாரின் சுயாட்சி இயக்கத்திற்கும் தலைமையகமாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். இவர்கள் தான் தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு ஆரம்பகாலத்தில் தலைமை வகித்திருக் கிறார்கள். மிகவும் ஆர்வத்தை அளிக்கக் கூடிய நபரான பி.பி. வாடியா பிரம்மஞான சங் கத்துடன்தான் நெருக்கமாக இருந்து வந்தார். இவர்தான் மதராஸ் லேபர் யூனியனுக்கும் ‘பின்னி’ ஆலைத் தொழிலாளர்களுக்கும் தலைமை வகித்துள்ளார். இவ்வாறு சங்கத் தின் தலைவர்களாக சீர்திருத்தவாதிகள்தான் இருந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் சுயாட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ, அல்லது பிந்தைய காலங்களில் காங்கிரசைச் சேர்ந்தவர்களாகவோ இருந்திருக்கிறார்கள் என்று வீரராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

1933க்குப் பின்னர்தான் இடதுசாரி சக்திகள் முன்னுக்குவருகின்றன. தென்னிந்தி யாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப் படும் சிங்காரவேலர் தொழிலாளர்களின் சங்கங்களை அமைக்கிறார்.

வீரராகவன் இவர்களில் பலரைச் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறார். காங்கிரஸ் சோச லிஸ்ட் கட்சி தேசிய இயக்கத்திலும் அகில இந்திய அளவில் தொழிற்சங்க இயக்கம், விவ சாய இயக்கம் ஆகியவற்றைக் கட்டுவதிலும் முன்னணியில் இருந்திருக்கிறது. ஆயினும் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அத்தகைய தொரு நிலையைப் பெற முடியவில்லை. உண் மையில் தோழர் பி.சுந்தரய்யா தன் கம்யூனிஸ்ட் பணியை சென்னையிலிருந்துதான் துவங்கி னார். ஆயினும் தொழிற்சங்க இயக்கத்தில் கம் யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு என்பது துவக் கத்தில் இல்லை. மேலும் சென்னை, தொழிற் சங்க இயக்கத்தின் மையமாகவும் அப்போது மாறவில்லை.

வீரராகவன் தன் கண்பார்வையை இளம் வயதில் இழந்து விடுகிறார். இப்புத்தகத்திற் கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது அசாத்தியமானமுறையில் தன் நினைவு களின் அடிப்படையிலேயே இதனை எழுதி யிருக்கிறார். இதனை எழுதும் காலத்தில் ஆவணங்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மட்டும் அவர் இதனை எழுதிட வில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த கம்யூ னிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, வி.பி. சிந் தன் போன்ற அனைவரையும் சந்தித்து, அவர் களைப் பேட்டி கண்டிருக்கிறார். தோழர் வி.பி. சிந்தன் என்னை ஆகர்ஷித்ததைப்போலவே, வீரராகவனையும் கணிசமான அளவிற்கு ஆகர்ஷித்திருக்கிறார்.

மாணவராக இருந்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராக இருந்திருக்கிறார். அப்போது நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகளில் அனைத்திலும் முழுமையாகத் தன்னை ஈடு படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். தொழிலா ளர்கள் நடத்திடும் வாயில் கூட்டங்கள், வேலை நிறுத்தங்கள் அனைத்திலும் அவரைக் காண முடியும்.

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு வீரராக வனுக்குத் துணையாக இருந்தவர்களில் தோழர் எஸ்.எஸ். கண்ணன் மிகவும் முக்கிய மானவர். காரல் மார்க்ஸ் நூலகம் என்று தனி யார் நூலகத்தைத் தன்னந்தனியாக நடத்தி வரும் அவருக்கு வயது 90. அவர் வீரராகவ னுக்கு இப்புத்தகத்தை எழுதுவதற்கு படிப்பவ ராக (ளஉசiநெ-ஆக) இருந்ததுடன், புத்தகங்களை சேகரிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடு படுத்திக்கொண்டிருந்தார். இவரது தமிழாக் கத்தில் இப்புத்தகம் ஏற்கனவே தமிழில் வெளி வந்துவிட்டது.

இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் லெப்ட்வேர்ட் மிகவும் பெருமைப்படுகிறது. இதனை மிகவும் பாராட்டுவதுடன், அனை வரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார். பின்னர் இதனை அவர் வெளியிட, முதுபெரும் அறிஞர் ஜி.பி. தேஷ்பாண்டே அதனைப் பெற்றுக் கொண்டார். லெப்ட் வேர்ட் மேலாண்மை ஆசிரியர் சுதான்வா தேஷ்பாண்டே (மேனே ஜிங் எடிட்டர்) நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

தொகுப்பு: ச.வீரமணி

No comments:

Post a Comment