Sunday, 3 September 2023

விடுபட்ட கேடர்களின் பெயர் மாற்றம்

விடுபட்ட கேடர்களின் பெயர் மாற்றம்
விடுபட்ட கேடர்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கோரி வந்துக் கொண்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என நிர்வாகத்திற்கு தொடர்ச்சியான கடிதங்களையும் எழுதி வந்துக் கொண்டுள்ளது.

29.08.2023 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, RESTRUCTURING பிரிவையும் கூடுதலாக கவனிக்கும் திருமிகு அனிதா ஜோஹ்ரி, PGM(SR) அவர்களை சந்தித்து, விடுபட்ட கேடர்களின் பெயர் மாற்றும் பணியினை உடனடியாக துவக்கி, விரைவில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

BSNL WWCC METTING


2 நாட்கள் நடைபெறும் BSNL WWCCயின் விரிவடைந்த கூட்டம், புது டெல்லியில், 02.09.2023 அன்று துவங்கியது.
2 நாட்கள் நடைபெற உள்ள BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், 02.03.2023 அன்று காலை 11.00 மணிக்கு துவங்கியது. புதுடெல்லி K.G.போஸ் பவனில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, மத்திய சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் ரமா தேவி தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அகில இந்திய அமைப்பாளர் தோழர் K.N.ஜோதி லட்சுமி, வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்திய, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, ஊதிய மாற்றம், BSNLன் 4G / 5G துவக்குவதில் உள்ள கால தாமதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் நிலை பற்றி உரையாற்றினார். BSNL நிறுவனம், நஷ்டமையும் நிறுவனமாக மாறுவதற்கு காரணமான, BSNLஐ பாரபட்சமாக நடத்தும், அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாகவும் அவர் விரிவாக பேசினார்.

உணவு இடைவேளைக்கு பின், பங்கேற்ற தோழர்கள், தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

Wednesday, 15 March 2023

சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள், இன்னமும் ஏன் வெளியிடப்படவில்லை?

 சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள், இன்னமும் ஏன் வெளியிடப்படவில்லை?

18.12.2022 அன்று நடைபெற்ற சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை, நீதிமன்றம் ஏற்கனவே விலக்கிக் கொண்டுள்ளது. ஆனாலும், நிர்வாகம் இன்னமும் முடிவுகளை வெளியிடவில்லை. முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படாததால், தேர்வு எழுதியவர்கள், கோபத்தில் உள்ளனர்.

தேர்வு முடிவுகளை வெளியிட வைப்பதற்கு, BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, 14.03.2023 அன்றும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, திருமிகு சமிதா லுத்ரா GM (Rectt. & Trng.) அவர்களை சந்தித்து விவாதித்தார்.

நீதிமன்ற உத்தரவை அமலாக்குவதற்கு, பல தொகுக்கும் பணிகள் உள்ளதாக, GM (Rectt. & Trng.) பதிலளித்தார். மாற்று திறனாளிகளுக்கு, மொத்தமுள்ள 445 பதவிகளில், 4 சதவிகிதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 4 சதவிகிதம் கணக்கிட்டால், அது 18 பதவிகள் என வருகிறது. இந்த 18 பதவிகளை, மாநிலங்களுக்கு எவ்வாறு பிரிப்பது என்பதுதான் தற்போதுள்ள கேள்வி?

உதாரணமாக, 4 ச்தவிகித பதவிகளை மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கினால், அங்கு OC பிரிவில் உள்ளவர் வெளியேற்றப்படுவார். அவர், இரண்டாவது விருப்பமாக தமிழ்நாட்டினை தெரிவித்திருந்து, அவருக்கு தமிழ்நாடு மாநிலம் ஒதுக்கப்பட்டால், தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாகும்.

மாற்று திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு செய்வதில், புதிய சட்ட பிரச்சனைகள் எதுவும் வந்து விடக் கூடாது என்பதற்காக, கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள RECRUITMENT மற்றும் ESTABLISHMENT பிரிவுகள், பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, GM (Rectt. & Trng.) தெரிவித்தார். இந்த பிரச்சனைக்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, விரைவில் தீர்வு காண்பதற்கு கார்ப்பரேட் அலுவலகம் பணியாற்றி வருவதாகவும், GM (Rectt. & Trng.) கூறினார்.

சிறப்பு JTO தேர்வு எழுதியுள்ள தோழர்கள், அமைதி காக்கவும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண BSNL ஊழியர் சங்கம் கடுமையான முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு JTO இலாகா தேர்வு

 சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள், இன்னமும் ஏன் வெளியிடப்படவில்லை ?


18.12.2022 அன்று நடைபெற்ற சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை, நீதிமன்றம் ஏற்கனவே விலக்கிக் கொண்டுள்ளது. ஆனாலும், நிர்வாகம் இன்னமும் முடிவுகளை வெளியிடவில்லை. முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படாததால், தேர்வு எழுதியவர்கள், கோபத்தில் உள்ளனர்.


தேர்வு முடிவுகளை வெளியிட வைப்பதற்கு, BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, 14.03.2023 அன்றும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, திருமிகு சமிதா லுத்ரா GM (Rectt. & Trng.) அவர்களை சந்தித்து விவாதித்தார்.


நீதிமன்ற உத்தரவை அமலாக்குவதற்கு, பல தொகுக்கும் பணிகள் உள்ளதாக, GM (Rectt. & Trng.) பதிலளித்தார். மாற்று திறனாளிகளுக்கு, மொத்தமுள்ள 445 பதவிகளில், 4 சதவிகிதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 4 சதவிகிதம் கணக்கிட்டால், அது 18 பதவிகள் என வருகிறது. இந்த 18 பதவிகளை, மாநிலங்களுக்கு எவ்வாறு பிரிப்பது என்பதுதான் தற்போதுள்ள கேள்வி?


உதாரணமாக, 4 ச்தவிகித பதவிகளை மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கினால், அங்கு OC பிரிவில் உள்ளவர் வெளியேற்றப்படுவார். அவர், இரண்டாவது விருப்பமாக தமிழ்நாட்டினை தெரிவித்திருந்து, அவருக்கு தமிழ்நாடு மாநிலம் ஒதுக்கப்பட்டால், தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாகும்.


மாற்று திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு செய்வதில், புதிய சட்ட பிரச்சனைகள் எதுவும் வந்து விடக் கூடாது என்பதற்காக, கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள RECRUITMENT மற்றும் ESTABLISHMENT பிரிவுகள், பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, GM (Rectt. & Trng.) தெரிவித்தார். இந்த பிரச்சனைக்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, விரைவில் தீர்வு காண்பதற்கு கார்ப்பரேட் அலுவலகம் பணியாற்றி வருவதாகவும், GM (Rectt. & Trng.) கூறினார்.


சிறப்பு JTO தேர்வு எழுதியுள்ள தோழர்கள், அமைதி காக்கவும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண BSNL ஊழியர் சங்கம் கடுமையான முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.


 தோழர் P. அபிமன்யு 

 பொதுச் செயலாளர்



 

BSNLEU AIBDPA TN BSNLEU TCWU ஒருங்கிணைப்பு குழு


 BSNLEU AIBDPA TN  BSNLEU TCWU ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக 
ஏப்ரல் 5 டெல்லியில் நடைபெறும் விவசாய தொழிலாளி பேரணி பற்றிய கருத்தரங்கம்  நெல்லையில் G.M. அலுவலக மாநாட்டு அரங்கில் எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் 
AIBDPA  மாவட்ட செயலர் தோழர் S.முத்துசாமி அவர்கள் தலைமையில் தொடங்கியது.

 கலந்து கொண்ட தோழர்கள் அனைவரையும் BSNLEU நெல்லை மாவட்ட செயலர் தோழர்
N. சூசை மரிய அந்தோணி  அவர்கள்  உற்சாகமாக வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்கள். 

தொடக்க உரையை BSNLEU மாநில உதவி செயலர்  தோழியர்  S.அழகுநாச்சியார் அவர்களும், விளக்க உரையை AIBDPA அகில இந்திய உதவிப் பொருளாளர் தோழியர் V. சீதாலட்சுமி அவர்களும் பேரணியின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 

BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் P.ராஜகோபால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கருத்தரங்கிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக BSNLEU மாநில உதவி தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் கலந்து கொண்டு நெல்லை மாவட்டம் சங்கம் மற்றும் மாவட்ட செயலரின் செயல்பாடுகள் குறித்தும் பேரணியின் அவசியம் குறித்தும் எழுச்சியுரை ஆற்றினார்கள். 

சிறப்புரையாக AGS BSNL CCWF, TNTCWU மாநில தலைவர் தோழர்
 C.பழனிச்சாமி அவர்கள் பல்வேறு கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள் அதிக எண்ணிக்கையில் தோழர்களை திரட்டிய ஒருங்கிணைப்பு குழுவிற்கும், சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய நெல்லை மாவட்ட செயலருக்கும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட பெண் தோழியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். 

தோழர்கள்  அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 

கலந்து கொண்ட பெண் தோழியர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. 

TNTCWU மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்  S.முருகன் அவர்கள் நன்றி உரையுடன் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு சர்க்கரை பொங்கலுடன்  வழங்கப்பட்டு கருத்தரங்கம் இனிதே நிறைவு பெற்றது. 

அதன் பின் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் மாவட்ட மட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, WWCC மாவட்ட கன்வீனர் தோழியர் S.சுகந்தி பானு அவர்கள் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது. 

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்.
BSNLEU - 49
AIBDPA - 34
TNTCWU -15. 
மொத்தம்  98 தோழர்கள்.

கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன்.🙏

நி.சூசை மரிய அந்தோணி, 
மாவட்ட செயலர்,
BSNLEU, நெல்லை.

Tuesday, 10 May 2022

 புதிய பதவி உயர்வு கொள்கை உருவாக்க வேண்டுமென CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியதுடன், DIRECTOR(HR) உடன் பொதுச்செயலரும், துணை பொதுச்செயலரும் விவாதம்

ஊழியர்களுக்கு ஒரு புதிய பதவி உயர்வு கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது. ஊழியர்களுக்கு, புதியதொரு பதவி உயர்வு கொள்கை அமலாக்கப்பட வேண்டுமென மற்றுமொரு கடிதத்தை, 09.05.2022 அன்று, CMD BSNLக்கு எழுதியுள்ள BSNL ஊழியர் சங்கம், அதற்கென கீழ்கண்ட காரணங்களை சுட்டிக் காட்டியுள்ளது.

1) அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையே NEPP ஒப்பந்தம் ஏற்பட்டு, 14 வருடங்கள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன. அதன் பின் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. எனவே ஒரு புதிய பதவி உயர்வு கொள்கை, கண்டிப்பாக தேவையான ஒன்றாக உள்ளது.

2) ஊழியர்களுக்கான பதவி உயர்வு திட்டத்திற்கும், அதிகாரிகளுக்கான பதவி உயர்வு திட்டத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

3) NEPPக்குள்ளேயே, DoTயில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும், BSNLல் நேரடியாக நியமிக்கப்பட்டவர்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. DoTயில் பணி நியமனம் செய்யப் பட்டவர்களுக்கு முதல் இரண்டு பதவி உயர்வுகள் 4 மற்றும் 7 வருடங்கள் கடந்த பின்னர் கிடைக்கும். ஆனால் நேரடி நியமன ஊழியர்களுக்கு முதல் இரண்டு பதவி உயர்வுகளும், 8-8 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் கிடைக்கும்.

4) கணிசமான ஊழியர்கள், ஊதிய தேக்க நிலையை அடைந்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இந்த ஊதிய தேக்க நிலை பிரச்சனை தீர்வு காணப்படவும் புதிய பதவி உயர்வு கொள்கை அவசியம்.

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு மற்றும் துணை பொதுச்செயலர் தோழர் ஜான் வர்கீஸ் ஆகியோர், 09.05.2022 அன்று DIRECTOR(HR) அவர்களை சந்தித்து, இந்த பிரச்சனை தொடர்பாக விரிவாக விவாதித்ததுடன், ஊழியர்களுக்கான ஒரு புதிய பதவி உயர்வு கொள்கை அமலாக்கப்பட வேண்டுமென வலுவாக வற்புறுத்தியுள்ளனர்.

 TSMலிருந்து நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்கும் பிரச்சனை தொடர்பாக, பொதுச்செயலரும், துணைப்பொது செயலரும் DIRECTOR(HR) இடம் விவாதம்

TSMலிருந்து நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து கோரி வருகின்றது. சுமார் 400 TSM தோழர்கள், இவ்வாறு நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். துவக்கத்திலேயே, இந்த பிரச்சனைய, BSNL ஊழியர் சங்கம் கையில் எடுத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை, தொலை தொடர்பு துறை நிராகரித்து விட்டது.

இந்த பிரச்சனையை மீண்டும் தொலை தொடர்பு துறையின் செயலாளர் மட்டத்தில் எடுக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், DIRECTOR(HR)க்கு கடிதம் எழுதியுள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் துணைப்பொது செயலாளர் தோழர் ஜான் வர்கீஸ் ஆகியோர், 09.05.2022 அன்று திரு அர்விந்த வட்னேர்கர் DIRECTOR(HR) அவர்களை சந்தித்து, மீண்டும் இந்த பிரச்சனையை தொலை தொடர்பு துறையின் செயலாளர் மட்டத்தில் விவாதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதில் ஆவன செய்வதாக DIRECTOR(HR) உறுதி அளித்தார்.

Tuesday, 22 March 2022

சங்கத்தின் அமைப்பு தினம்

 


நெல்லை தொலைபேசி நிலையத்தில் தோழர் முத்துதிருபரன் தலைமையில் தோழர் P. ராஜகோபால் சங்க கொடியை ஏற்றினார்

Thursday, 10 March 2022

கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்*

 *கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்* 

-----------------------------------------------------------------

நெல்லை மாவட்டம்

-----------------------------------

 *BSNLEU - AIBDPA  - TNTCWU* ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெல்லை ஸ்ரீபுரம் தொலைபேசி நிலையம் முன்பு இன்று 10.03.2022   மதியம் சுமார் 1.30 மணியளவில்  கருப்பு அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  


AIBDPA மாவட்ட செயலர் *தோழர் ச.முத்துசாமி*  தலைமை தாங்கினார். 


BSNLEU  மாவட்ட செயலர் *தோழர்* 

 *N.சூசை மரிய அந்தோணி*  வரவேற்புரை நிகழ்த்தினார்.


BSNLEU மாநில அமைப்பு செயலாளர் *தோழியர் V சீதாலட்சுமி* கோரிக்கையை விளக்கிப் பேசினார். 


TNTCWU மாவட்ட செயலர் *தோழர் P. ராஜகோபால்* நன்றி கூறினார். 


அதன் பின்னர்  *GM அவர்களிடம் மெமோரான்டம்* கொடுக்கப்பட்டது.


இவண்

 *BSNLEU-AIBDPA-TNTCWU* 

ஒருங்கிணைப்புக் குழு

நெல்லை மாவட்டம்.

 _10-03-2022._

Monday, 28 February 2022

ALTTC, BSNL வசமே இருக்கும்

 

ALTTC, BSNL வசமே இருக்கும்

அனைவருக்கும் வாழ்த்துக்கள். AUABயின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, ALTTC பிரச்சனையில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என DoT, இன்று (25.02.2022) ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது. ALTTC, BSNL வசமே இருக்கும் என்பதே அதன் பொருள். நிரந்தரமாக ALTTC, BSNL வசமே இருப்பதை AUAB உறுதி செய்யும்.

Wednesday, 23 February 2022

*10 வது மாவட்ட மாநாடு


தோழர்களே  !வணக்கம் !!

 நமது  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பத்தாவது மாவட்ட மாநாடு மிகவும் எழுச்சியுடன் உற்சாகமாக 22-02-2022 அன்று காலை ஒன்பது மணிக்கு நெல்லை தொலைபேசி நிலையத்தில் உள்ள மாநாட்டு அரங்கம் தோழர் D.கோபாலன் நினைவு அரங்கத்தில் துவங்கியது.

மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் தோழர் V. ஆண்டபெருமாள் தலைமை தாங்கினார்.

மாநாட்டின் முதல் நிகழ்வாக தேசியக்கொடியினை மாவட்டப் பொருளாளர் தோழர் S.சங்கரநாராயணன் ஏற்றிவைத்தார்.

 சங்க கொடியினை மாவட்டத் துணைத்  தலைவர் தோழர் E.நடராஜன் ஏற்றி வைத்தார்.

 மாவட்ட உதவி செயலர் தோழர் S.அழகு நாச்சியார் தியாகிகளுக்கு அஞ்சலி உரையை நிகழ்த்தினார்.

 மாவட்டச் செயலர் தோழர் N. சூசை மரிய அந்தோணி மாநாட்டிற்கு வருகை தந்த அனைத்து தோழர்களையும்  வரவேற்கும் முகமாக வரவேற்புரை நிகழ்த்தினார்.

 BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார்.

 மாநில தலைவரும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர் S.செல்லப்பா சிறப்புரையாற்றினார்.

 BSNL பொது மேலாளர் மரியாதைக்குரிய பிஜி பிரதாப் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

 மாநில அமைப்புச் செயலர் தோழியர் V. சீதாலட்சுமி எழுச்சியுரையாற்றினார்.

 உயர்திரு S. கிருஷ்ணகுமார் DGM(Admin) ,உயர்திரு G. வீராசாமி DGM(IM) ஆகியோர்
கருத்துரை வழங்கினர்.

 உயர்திரு M. மணிமாறன் DGM(BBC) வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.

BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி , BSNLEU தூத்துக்குடி மாவட்ட செயலர் தோழர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

AIBDPA சங்கத்தின் சார்பில் தலைவர்களுக்கு பொன்னாடை போற்றப் பட்டது.

 AIBDPA மாவட்ட செயலாளர் தோழர் S. முத்துசாமி , TNTCWU  மாவட்ட செயலர் தோழர் P.ராஜகோபால் , NFTE BSNL மாவட்ட செயலாளர் தோழர் C.நடராஜன், AIGETOA மாவட்ட செயலாளர் தோழர் K. விஜய் மணிகண்ட ராஜ், SNEA BSNL மாவட்ட செயலாளர் தோழர் V. பாலசுப்ரமணியன், SEWA BSNL மாவட்டச் செயலர் தோழர் K  விஜய் , AIBSNLEA மாவட்டச் செயலாளர் தோழர் N. அருணாச்சலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆய்வுப் பொருளாக :-

1.செயல்பாட்டு அறிக்கை
2.அமைப்பு நிலைவிவாதம்
3. வரவு செலவு கணக்கு
4. நிர்வாகிகள் தேர்வு  ஆகியவை நடைபெற்றது.

தோழர் S.சங்கரநாராயணன் மாவட்டப் பொருளாளர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

புதிய நிர்வாகிகளாக
 தோழர் V. ஆண்டபெருமாள் , மாவட்டத் தலைவராகவும்,
 தோழர் N.சூசை மரிய அந்தோணி, மாவட்டச் செயலராகவும்,
 தோழர் M.நாசர் தீன், மாவட்டப் பொருளாளராகவும் உள்ளிட்ட 19 தோழர்கள்
ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 மாநாட்டின் நிறைவாக மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் P. அலாவுதீன் நன்றியுரையாற்றினார் .

மாவட்ட மாநாடு மாலை ஆறு மணி அளவில் இனிதே நிறைவு பெற்றது.

 கலந்துகொண்ட அத்தனை அதிகாரிகளுக்கும்,தலைவர்களுக்கும், மாவட்ட செயலர்களுக்கும், மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், முன்னணி தோழர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

 தோழமையுடன்
 N. சூரிய மரிய அந்தோணி , 
மாவட்ட செயலர்,
 BSNLEU ,
திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டம்.
 22-02-2022.

Tuesday, 20 April 2021

 வரலாற்று சாதனை- ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகையில் 20.47 கோடி ரூபாய்கள் இன்று பட்டு வாடா செய்யப்பட்டது.

BSNL நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில், உழைப்பு சுரண்டல் கடுமையாக நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது. சுரண்டப்பட்டு வரும் அந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தையும் வருடக்கணக்கில், நிர்வாகம் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு வருகிறது.

ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும், BSNL ஊழியர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டம் ஏராளம்.. ஏராளம்...

ஆனாலும் நிர்வாகம் அசைய மறுத்தது. வேறு வழியின்றி நீதி மன்றத்தை நாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. உழைக்கும் மக்கள் நீதியை பெறுவது கூட அசாதாரனமானது என்பதை புரிந்துக் கொண்ட நமது சங்கங்கள், உழைக்கும் மக்களின் சிரமங்களை முழுமையாக புரிந்துக் கொண்ட ஒரு வழக்கறிஞர், அதுவும் ஒரு மூத்த வழக்கறிஞர் தேவை என்பதை உணர்ந்து, பிரபல வழக்கறிஞர் தோழர் N.G.R.பிரசாத் அவர்களை உரிய முறையில் அணுகினோம். அவர் ஒரு பைசா கூட முன்பணம் வாங்காமல் ஏற்றுக் கொண்டு திறம்பட வாதாடினார். அவரது வாத திறமையால் இன்று நமது நெடு நாளைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

முதல் கட்டமாக 1857 ஒப்பந்த தொழிலாளிக்கு 6.10 கோடி ரூபாயும், இரண்டாம் கட்டமாக 2902 ஒப்பந்த தொழிலாளிக்கு 8.40 கோடி ரூபாயும், மூன்றாவது கட்டமாக இன்று (20.04.2021) 4668 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20.47 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 34.98 கோடி ரூபாய் நீதி மன்ற உத்தரவு மூலம் பெற்றுள்ளோம். மொத்தத்தில் 4759 ஒப்பந்த தொழிலாளிகளுக்கு சுமார் 34.98 கோடி ரூபாயை ஒப்பந்தகாரர்களுக்கு பதிலாக மத்திய தொழிலாளர் நல அதிகாரிகள் மூலம் பெற்று சரித்திர சாதனை படைத்து விட்டோம்..

இது சாதாரண நிகழ்வு அல்ல..

தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமான சாதனை.. BSNL-லில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வெற்றி..

வழக்கு மன்றத்தில் நமக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் மரியாதைக்குரிய திரு N.G. R பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் சதீஸ்குமார், ராம் சித்தார்த் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்..

நமக்காக உழைத்திட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் நமது நன்றிகளும், வாழ்த்துக்களும்...

நமக்கு மிகச்சரியாக வழிகாட்டிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் தலைவர் தோழர் P.சம்பத் அவர்களுக்கும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களுக்கும், BSNLCCWF பொதுச்செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்,...

நமது சங்கங்களின் மீது நம்பிக்கை வைத்து, கடுமையான பிரச்சனைகளை சந்தித்த போதும், உறுதியாக சங்கங்களின் பின் நின்ற அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கு எப்போதும், ஆதரவாக அரவணைத்து நின்று வழிகாட்டிய BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட, கிளை மட்ட தலைவர்களுக்கும், உதவிக்கரம் நீட்டிய ஓய்வூதியர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்....

வாங்கிய சம்பளத்தில் உள்ள முரண்பாடு, EPF, ESI பிரசனை ஆகியவற்றை அடுத்து சரி செய்வோம்.

நாம் தோற்றதில்லை.. தோற்கப் போவதுமில்லை..

Friday, 9 April 2021

காலம் 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 BSNL ஓய்வூதியர்களின், BSNL MRS அட்டையின் காலம் 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

BSNL ஓய்வூதியர்களின், BSNL MRS அட்டையின் காலம் இதற்கு முன்னர், 30.03.2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்றின் அபாயம் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு, BSNL ஓய்வூதியர்களின், BSNL MRS அட்டையின் காலத்தை, 30.09.2021 வரை, அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டித்து, கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

 மார்ச் மாத ஊதியம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், ஏப்ரல் மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் CMD BSNLக்கு கடிதம்

2021 மார்ச் மாத ஊதியத்தை வழங்கியதற்காக, ஊழியர்கள் சார்பாக, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள், CMD BSNLக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஒவ்வொரு மாதமும் கால தாமதமாக ஊதியம் வருவதால் ஏற்படும் சிரமங்களில் இருந்து ஊழியர்களை காப்பாற்றும் விதமாக, ஏப்ரல் மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க வேண்டும் என்றும், அவர் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Sunday, 4 April 2021

சர்வதேச டெண்டர்

 சர்வதேச டெண்டர் மூலம் BSNL நிறுவனம், 4G கருவிகளை வாங்க அனுமதிப்பது என ETG முடிவு.

BSNL நிறுவனத்தின் 4G சேவைகள் துவங்குவது, கடுமையாக தாமதமாக்கப்பட்டு வருகின்றது. 4Gக்கான கேந்திரமான கருவிகளை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே BSNL வாங்க வேண்டும் என்கிற மத்திய அரசின் நிலைபாடுதான், BSNLன் 4G சேவைகள் துவக்கத்தை தாமதப்படுத்தி வருகின்றது. இந்த தாமதம், BSNL மற்றும் அதன் ஊழியர்களின் எதிர்காலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனையை, BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக, மத்தியதொலை தொடர்பு அமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றது. சமீபத்தில் கூட, 4G கருவிகளை வாங்க BSNL நிறுவனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என அரசாங்கத்தை வற்புறுத்தி, நாடுமுழுவதும், BSNL ஊழியர் சங்கம் தெருமுனை பிரச்சாரங்களை நடத்தியுள்ளது.

இந்த பின்னணியில், இந்த பிரச்சனை தொடர்பாக, 30.03.2021 அன்று, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, CMD BSNL இடம் விவாதித்தார். விவாதத்தின் போது, சர்வதேச தயாரிப்பாளர்களான, நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 4G கருவிகளை வாங்க, பாரத பிரதமரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதன்மை ஆலோசகர் திரு விஜய ராகவன் தலைமையிலான EMPOWERED TECHNOLOGY GROUP (ETG), BSNLக்கு அனுமதி வழங்கியுள்ளதாக CMD BSNL தெரிவித்தார். இதற்கு தேவையான டெண்டர்களை விடும் பணிகளை, BSNL எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உண்மையில், இது வரவேற்கத்தக்க அம்சம். இது BSNL நிறுவனத்திற்கு ஒரு நிம்மதி பெருமூச்சை கொடுக்கும். எனினும், புதிய டெண்டர்கள் மூலம் கருவிகளை வாங்கி 4G சேவையை வழங்க BSNLக்கு, குறைந்த பட்சம் ஒரு வருட காலம் ஆகும்.

Monday, 19 October 2020

 இரங்கல் கூட்டம். 

----------------------------

நெல்லை மாவட்டம் 

--------------------------------

  19.10.2020  திங்கள்கிழமை, GM அலுவலகத்தில் வைத்து மதியம் 01.00 மணியளவில்,AIBDPA மாவட்ட செயலர் தோழர் D. கோபாலன்  அவர்களுக்கு BSNLEU  சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.


          BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் N. சூசை மரியஅந்தோணி தலைமை தாங்கினார்.


          நெல்லை மாவட்ட TDM  கலந்து கொண்டு தோழர்  D.கோபாலன் அவர்கள்  படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.அதைத்தொடர்ந்து அனைத்து தோழர்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


           நமது AIBDPA மாநில உதவி தலைவர் தோழர் V. S. வேம்புராஜா, BSNLEU மாநில அமைப்பு செயலாளர் தோழர் V. சீதாலட்சுமி, TNTCWU மாவட்ட செயலாளர் தோழர் P. ராஜகோபால், அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல சங்க மாவட்ட செயலாளர் தோழர் பரமசிவன்,SNEA மாவட்ட செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், NFTE BSNL மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சாலன், TEPU  மாவட்ட செயலாளர் தோழர் சுகுமார் உட்பட பல மாவட்ட செயலாளர்கள் அஞ்சலி உரையாற்றினர். 


             நமது AIBDPA தோழர்கள் உட்பட பல அதிகாரிகள் ,ஊழியர்கள்,தோழமை சங்க தோழர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


             நிறைவாக AIBDPA  மாவட்ட தலைவர் தோழர் ச.முத்துசாமி அஞ்சலி நிறைவுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார். 






Saturday, 17 October 2020

16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..

 16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..

ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்திற்காக பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கிய போதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 15% சம்பளம் கூட கிடைக்க பெறவில்லை.. 22.09.2020 அன்று நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் ஒப்பந்தகாரர்களின் பில் தொகைக்கான பணத்தை நிர்வாகம் தயாராக வைத்திருக்க வேண்டும்..இந்த தொகை நிலுவை சம்பளத்திற்கான தொகையை விட குறைவில்லாமல் இருக்க வேண்டும்..மறு உத்தரவு நீதிமன்றத்தால் வழங்கும் வரை ஒப்பந்தகாரர்களுக்கு பில் தொகை கொடுக்க கூடாது என்று சொல்லப்பட்ட பிறகும் கூட இன்றைய தேதி வரை நிர்வாகம் நிலுவை சம்பளத்தை கணக்கீடு செய்யவோ சொல்லப்பட்ட தேதியில் பணத்தை செலுத்தவோ முன்வரவில்லை..மீண்டும் இந்த முறையும் நிர்வாகம் 5 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்தார்கள்.. ஒப்பந்த தொழிலாளர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே வேலை செய்தமைக்கு சம்பளம் கிடைக்காமல் ஒப்பந்த தொழிலாளர்கள் மிக பெரிய துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.. சம்பள நிலுவை தொகை என்பது பல கோடி ரூபாய்களாக இருக்கிற காரணத்தால் ஒரு சிறப்பு எற்பாடு செய்து RLC நிலுவை தொகையை தொழிலாளர்களிடம் விசாரிக்க வேண்டும் அதற்கு பிறகு அந்த தொகையை நிர்வாகம் RLC யிடம் செலுத்த வேண்டும்.. முந்தைய இடைக்கால உத்தரவுகளும் தற்போதைய நிலைமைகளையும் கணக்கில் எடுத்து கொண்டு நிர்வாகம் நிலுவை தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மண்டல தொழிலாளர் ஆணையரிடம் செலுத்த வேண்டும்.. அதற்கு பிறகு அனைத்து தரப்பும் நிலுவை சம்பளத்தை பட்டுவாடா செய்வதற்கான செயல் முறையை கண்டறிய வேண்டும்.. இடைக்கால உத்தரவுகள் நிர்வாகம் அனைத்து ஒப்பந்தகாரர்களின் மொத்த பில் தொகையினை சரி பார்த்து அதில் 25% தொகையை மண்டல தொழிலாளர் ஆணையர் துவங்கப்பட வேண்டிய தனி வங்கி கணக்கான 'Contract Workers Wage Due WP 34513 ' என்ற வங்கி கணக்கில் 31.10.2020 குள் செலுத்த வேண்டும்.. மீதமுள்ள 25% நிலுவை தொகையை 20.11.2020 குள் Contract Workers Wage Due W.P 34513 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.. 50% நிலுவை தொகையை 20.12.2020 குள் Contract Workers Wage Due W.P 34513 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.. இந்த மாதம் இறுதிக்குள் செலுத்தப்படுகிற 25% நிலுவை தொகை என்பது தீபவளிக்கு முன்பு ஒரு பகுதி சம்பளத்தையாவது ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும்.. நிர்வாகம் நிலுவை தொகையை நீதிமன்றம் கொடுத்த கால கெடுவிற்குள் கறாராக செலுத்த வேண்டும்.. அடுத்த விசாரணை 05.11.2020 அன்று நடைபெறும்.. TNTCWU மாநில சங்கம்


இரங்கல் செய்தி.   
------------------------------        
          அருமைத் தோழரும்      AIBDPA வின் திருநெல்வேலி மாவட்டச் செயலருமான , தோழர் D.கோபாலன்அவர்கள்  திருநெல்வேலி
யில் இன்று (17-10-20 ) காலை காலமாகி விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

BSNLEU வின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், தற்போது பாரதிநகர் நலவாழ்வு சங்கத்தின் செயலாளராகவும் இருந்து திறம்பட செயலாற்றியவர். 

   அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

 அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 
02.00மணிக்கு சுந்தரபாண்டியபுரத்தில் வைத்து நடைபெற்றும்.

ஆழ்ந்த வருத்தத்துடன், 
P.ராஜகோபால் TNTCWU 
நெல்லை மாவட்டம்.

Friday, 16 October 2020

தகவல் அறியும் உரிமைக்குழுவை

தகவல் அறியும் உரிமைக்குழுக்களை மத்திய மாநில சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் என செப்டம்பரில் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.   BSNL நிர்வாகத்திடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பல்வேறு தகவல்களை பெறுவது தான் இந்தக் குழுக்களின் பணி.  அவ்வாறு பெறும் தகவல்கள் மூலம், நமது சங்கம், நிர்வாகத்திடமும், அரசாங்கத்திடமும், பிரச்சனைகளை வலுவாக எழுப்ப இயலும்.
மத்திய செயற்குழுவின் இந்த முடிவையொட்டி, 09.10.2020ல் கூடிய அகில இந்திய மையக்கூட்டம், கீழ்கண்ட தோழர்களை கொண்ட அகில இந்திய தகவல் அறியும் உரிமைக்குழுவை உருவாக்கியுள்ளது: –
 (1)   தோழர்C.K.குண்டண்ணா, முன்னாள் கர்நாடக மாநில செயலர்.
(2) தோழர் மிஹிர்தாஸ் முன்னாள் AGS.
(3) தோழர் M.K.தவே, மத்திய சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர்.
இந்தக்குழுவின் அமைப்பாளராக தோழர் C.K.குண்டண்ணா  செயல்படுவார்.
மாநில தகவல் அறியும் உரிமைக்குழுக்களை, அனைத்து மாநிலங்களும் உடனடியாக உருவாக்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தோழர் P.அபிமன்யு
பொதுச்செயலாளர்