Tuesday 10 May 2022

 TSMலிருந்து நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்கும் பிரச்சனை தொடர்பாக, பொதுச்செயலரும், துணைப்பொது செயலரும் DIRECTOR(HR) இடம் விவாதம்

TSMலிருந்து நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து கோரி வருகின்றது. சுமார் 400 TSM தோழர்கள், இவ்வாறு நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். துவக்கத்திலேயே, இந்த பிரச்சனைய, BSNL ஊழியர் சங்கம் கையில் எடுத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை, தொலை தொடர்பு துறை நிராகரித்து விட்டது.

இந்த பிரச்சனையை மீண்டும் தொலை தொடர்பு துறையின் செயலாளர் மட்டத்தில் எடுக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், DIRECTOR(HR)க்கு கடிதம் எழுதியுள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் துணைப்பொது செயலாளர் தோழர் ஜான் வர்கீஸ் ஆகியோர், 09.05.2022 அன்று திரு அர்விந்த வட்னேர்கர் DIRECTOR(HR) அவர்களை சந்தித்து, மீண்டும் இந்த பிரச்சனையை தொலை தொடர்பு துறையின் செயலாளர் மட்டத்தில் விவாதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதில் ஆவன செய்வதாக DIRECTOR(HR) உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment