Friday 19 July 2019

மத்திய சங்கம் அறைகூவல்




ரயில்வே தனியார் மயத்திற்கு எதிரான இணைந்த பிரச்சார இயக்கம்- இணைந்துக் கொள்ள மத்திய சங்கம் அறைகூவல்
இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடி அவர்கள் முதல் நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளார். இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கைகள், அந்த நூறு நாட்கள் திட்டத்தில் உள்ள முக்கியமான அம்சம். அந்த திட்டங்களில்:-
-> ரயில்களை ஓட்டுவதை, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது. 
-> தனியார் நிறுவனங்களுக்கு, சம தள போட்டியை தருவதற்காக, பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களில் அரசு வழங்கி வரும் மானியங்களை திரும்ப பெறுவதன் மூலம், கட்டணங்களை உயர்த்துவது.
-> ரயில்வேயின் ரத்தினங்களான ரயில்வே தயாரிப்பு நிறுவனங்களை கார்ப்பரேஷனாக மாற்றுவதன் மூலம் தனியார் மயமாக்குவது. 
-> தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரயில் பெட்டிகளை வாங்குவதன் மூலம், நமது தயாரிப்பு நிலையங்களை அழித்து, நமது உள்நாட்டு உற்பத்தியை அழிப்பது.

இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கு எதிரான CITU சங்கத்தின் அறிக்கையினை இத்துடன் இணைத்துள்ளோம். ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கு எதிராக ரயில்வே மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் அனைத்து பிரச்சார இயக்கங்களிலும் மாவட்ட, மாநில சங்கங்கள் பங்கேற்க வேண்டும் என நமது மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment