Thursday 15 May 2014

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் - கண்டனம்.



பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் - கண்டனம்.

வங்கிகள் தேசிய மயமாக்கல் மூலம் நாடு அடைந்தமுன்னேற்றத்தை முடக்குவதற்காக மீண்டும்பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கிடும்இந்திய ரிசர்வ் வங்கிமத்திய அரசின்நடவடிக்கைகளை இந்திய வங்கி ஊழியர்கள்சம்மேளனம் வன்மையாகக்கண்டித்துள்ளது.இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்சம்மேளனம் - தமிழ்நாடு பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது:மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த நாடே எதிர்நோக்கி இருக்கும்போதுஇந்திய ரிசர்வ் வங்கி நியமனம் செய்த ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் தலைவர் பி.ஜே.நாயக் தலைமையிலானபொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் குழு அறிக்கையை நாயக் வெளியிட்டுள்ளார்இந்தநடவடிக்கைக்கு சாதகமாக 1970, 1980 வங்கி தேசியமயமாக்கல் சட்டங்கள் மற்றும் பாரத ஸ்டேட்வங்கிபாரதஸ்டேட் வங்கிதுணைவங்கிகள் சட்டங்களைரத்துசெய்வதற்கு பரிந்துரை செய்கிறது.இந்திய வங்கி ஊழியர்சம்மேளனம்-தமிழ்நாடு பி.ஜே.நாயக் குழு பரிந்துரைகளை கடுமையாக எதிர்க்கிறது.
திரும்பத் திரும்ப மத்தியில் ஆளும் கட்சிகளும்இந்திய ரிசர்வ் வங்கியும் பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனநவீன தாராளமயக் கொள்கைகளின் மீது முக்கியமுனைப்புக் காட்டும் ரகுராம் ராஜன்இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றபின்புஇதன் வேகம்பன்மடங்கு தீவிரமாகியுள்ளது.1969 ல் தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கல் காலகட்டத்திற்கு முன்பு, 1947முதல் 1969 வரை 500 தனியார் வங்கிகள் திவாலாகியுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இவ்வளவு ஏன், 1969 க்குப் பின்னும் கூட 25 தனியார் வங்கிகள் திவாலாகினஇதன் சுமையை பொதுத்துறைவங்கிகளே தாங்கிக் கொண்டனபொருளாதார நெருக்கடி வெடித்தபோதுசெப்டம்பர் 2008 முதல்,அமெரிக்காவில் 450 தனியார் வங்கிகள் வீழ்ச்சியடைந்தன.1970 தேசிய மயமாக்கல் சட்டமே அதன் பீடிகையில்என்ன கூறுகிறதுதனியார் வங்கிகள் அவற்றின் உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவேதொண்டாற்றுகின்றனஉணவுப் பாதுகாப்புவேலை வாய்ப்புவட்டார சமனற்ற தன்மையை போக்குவதுஆகிய தேசிய நலன் காக்கும் முன்னுரிமைகள் ஆகியவற்றை மனதில் கொண்டே இவைதேசியமயமாக்கப்பட்டன.பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கல் என்பது இந்திய ரிசர்வ் வங்கி,அரசின் பாமரனை உள்ளடக்கிய நிதிக் கொள்கைகளுக்கே முரணானதுதேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்தனியார் மயமானால்கோடிக்கணக்கிலுள்ள விளிம்பு நிலை மாந்தர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்தவழங்கப்பட்ட கடன் முன்னுரிமை துறைகள் கைவிடப்படும்நிறுவன ரீதியான கடன் வழங்கப்படாததாலேயேகடந்த பத்தாண்டுகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமானது.
கல்விக்கடன் வழங்கப்படாவிட்டால் ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடும்சிறு,குறு வர்த்தகக்கடன் நிறுத்தப்பட்டால்லட்சக்கணக்கான வேலைவாய்ப்பும் அழியும்.பெபி-தமிழ்நாடுமக்கள் பணம் மக்கள் நலனுக்கே என்பதற்காகவே நிற்கிறதுரிசர்வ் வங்கிஅரசு எடுக்கும் தனியார் மயக்கொள்கை பாமரன் நலனுக்குஎதிரானது.

No comments:

Post a Comment