Saturday, 6 July 2013

ஜூலை 9 தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கப் போராட்டம்

நெய்வேலி தொழிலாளரின் வீரம்செறிந்த போராட்டத்தை அனைத்துப் பொதுமக்களும் ஆதரிப்பீர்!
ஜூலை 9 தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கப் போராட்டம்
சென்னை, ஜூலை 5 -நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழி லாளர்களின் போராட்டத்தை ஆதரித்து ஜூலை 9 செவ்வாயன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள எச் எம்எஸ் தொழிற்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட் டம் நடைபெற்றது.
எச்எம்எஸ் பொதுச் செயலாளர் க.அ.ராஜா ஸ்ரீதர் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிஐ டியு தலைவர்கள் அ.சவுந்தரராசன் எம் எல்ஏ, ஜி.சுகுமாறன், ஏஐடியுசி தலைவர் கள் டி.எம்.மூர்த்தி, ஜே.லட்சுமணன், எல்.பி.எப். சார்பில் மு.சண்முகம், ஆ.நட ராசன், ஏடிபி சார்பில் தாடி.ம.இராசு, எ.சோமசங்கரன், ஐஎன்டியுசி சார்பில் ஆர்.பி.கே.முருகேசன், பி.எம்.எஸ். சார்பில் க.பழனிச்சாமி, எச்.எம்.எஸ். சார் பில் எம்.சுப்பிரமணியபிள்ளை, ஏஐசிசி டியு சார்பில் என்.குமரேஷ், எஸ்.ஜவ ஹர், ஏஐயுடிசி சார்பில் வி.சிவக்குமார், எஸ்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஐந்து சதமான பங்குகளை தனியா ருக்கு தாரைவார்க்கும் முடிவினை எதிர்த்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிலாளர் சங்கங் களும், அதிகாரிகள், பொறியாளர்களின் கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்து ஓர் போராட்டத்தில் இறங்கினர்.
அதனடிப் படையில் வாயிற்கூட்டங்கள், உண் ணாவிரத போராட்டங்கள் முடிவுற்று 3.7.2013 இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறி விக்கயிருந்த நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஓர் தடை உத்தரவை பெற்றுள்ளது. இருப்பினும் தொழிலாளர் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமின்றி, மத்திய அரசு பங்கு விற்பனை கைவிடும் வரை வேலைநிறுத்தம் செய்வதென நெய்வேலி அனைத்து தொழிலாளர் சங் கங்களும் முடிவு செய்ததை வரவேற் கிறோம். இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆதரித்து வரும் 9ம்தேதி தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்களும் மாநிலம் தழுவிய அளவில் இணைந்து போராட்டம் நடத்து வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.நெய்வேலி வரலாற்றில் அதிகாரி களும், பொறியாளர்களும், தொழிலாளர் களும் ஒருங்கிணைந்து போராடி பல சாதனைகளைப் படைத்த வரலாறு உண்டு என்பதை நினைவுபடுத்தி, பல் வேறு அச்சுறுத்தல்கள், நிர்ப்பந்தங்களி னால் பணிக்கு சென்றிருந்தாலும், அதி காரிகளும், பொறியாளர்களும் தங்கள் முழு ஆதரவை இப்போராட்டத்திற்கு அளித்து நெய்வேலி நிறுவனத்தை தனியார் மயத்திலிருந்து காப்பாற்றிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் அந்த அமைப்புகளுக்கு வைப்பதென் றும் தீர்மானிக்கப்படுகிறது.
வேலைநிறுத்தம் என்பது தொழி லாளர்களின் கடைசி ஆயுதம் என்ற நிலையில், நீதிமன்றம் இந்த பிரச்சனை களை பேசி முடிக்க வேண்டுமென்ற ஆலோசனைகளை வழங்குவதற்கு பதிலாக வேலை நிறுத்தத்தை தடை விதிப்பதை இக்கூட்டம் தொழிலாளர் களின் சார்பில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கருதுகிறது.நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை பொதுமக்களும், அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டுமென அனைத்து தொழிற்சங்கங்களின் கூட் டமைப்பு கேட்டுக் கொள்கிறது.நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து அனைத்து தொழிற்சங்கங் களும் இணைந்து மாவட்டத் தலை நகரங்களில் 9.7.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவ தென தீர்மானிக்கப்படுகிறது.

என்எல்சி பங்கு விற்பனை : தொழிலாளர் இயக்கம் தடுத்து நிறுத்தும்


என்எல்சி பங்கு விற்பனை : தொழிலாளர் இயக்கம் தடுத்து நிறுத்தும்
ஜி.ராமகிருஷ்ணன் உறுதி
சென்னை, ஜூலை 6 -என்எல்சி பங்கு விற்பனை யை தொழிலாளர்கள் தங்களின் போராட்டம் மூலம் தடுத்து நிறுத்துவார்கள் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித் தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் சனிக்கிழமையன்று (ஜூலை 6) செய்தியாளர்களை சந்தித்தனர்.இச்சந்திப்பின் போது அவர்கள் கூறியது வருமாறு:
ஜி.ராமகிருஷ்ணன்: என் எல்சி பங்குகளை மாநில அரசு வாங்கிக் கொள்ளும் என்று முதலமைச்சர் நல்லெண்ணத் தின் அடிப்படையில் கூறினார். இது பிரச்சனைக்குத் தீர்வா காது. தொழிலாளர்களும், நிர் வாகமும் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் பிரச்சனை யை தீர்க்க முடியாது. மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு முறையும் என் எல்சி பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சிக்கிற போதும் அதனை தொழிலாளர்கள் போராடி தடுத்துள்ளனர். தற் போதும் போராடுகின்றனர். ஊழியர்கள் பஞ்சப்படி கேட்டு போராடவில்லை. தேசத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை நடத்துகிறார்கள். அந்த தேச பக்தப் போராட்டத்தை ஆதரிப் பது சரியானதுதான்.தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து 9ம் தேதி போராட்டம் நடத்து கின்றன. இடதுசாரி கட்சிகள் சார்பில் 11ம் தேதி முதற்கட்ட மாக சென்னையில் ஆர்ப்பாட் டம். அதன்பிறகு அடுத்தடுத்த போராட்டங்கள் நடைபெறும்.
தா.பாண்டியன்: என்எல்சி-யின் பங்கு மட்டுமல்ல, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு களை விற்கக் கூடாது என்பது தான் இடதுசாரிகளின் நிலை. இந்நிறுவனத்திற்காக கையகப் படுத்தப்பட்ட நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்து வது சட்ட விரோதம்.என்எல்சி-க்கு நிலத்தை கொடுத்த விவசாயிகள். நிலக்கரி வெட்டி மின் உற்பத்தி செய்கிற தொழிலாளர்கள், இதனால் பயனடைந்த தென்மாநில முத லமைச்சர்கள் ஆகியோரிடம் அனுமதி பெறாமல் பங்கு விற் பனை செய்யக்கூடாது. ஆண் டுக்கு 1300கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் தரும் என்எல்சி பங்குகளை 460 கோடி ரூபாய்க்கு தனியாருக்கு விற்பது ஏற்புடையது அல்ல. இது லாபத்தை தனியாருக்கு பிரித் துக் கொடுப்பதேயாகும்.பாஜக, காங்கிரஸ் கட்சி களைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் பங்கு விற்பனை யை எதிர்க்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற் சங்கங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நிற்கின்றன. சுமூகச் சூழலை உருவாக்க வேண்டும்.
டி.கே.ரங்கராஜன்: கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., கூட்டுபேர உரிமையுள்ள தொழிற் சங்கங் களை அழைத்து பேசாமல், சட்ட விரோதமாக பங்குகளை விற்கிறார்கள். அதனை எதிர்த்து சட்டப்பூர்வமான முறையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். வேலை நிறுத்தம் தொழிற்சங்க உரிமை. என்எல்சி விரிவாக்கத் திற்காக பங்குகளை விற்பதாகக் கூறும் போலித்தனமான வாதங் களை வைத்து மக்களையும், தொழிலாளர்களையும் ஏமாற்ற முடியாது என்றார்.
ஜி.ராமகிருஷ்ணன்: உண வுப் பாதுகாப்பு மசோதா குறித்து 2 வருடங்களாக விவாதிக்கப் பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் உணவு பாதுகாப்பு மசோதாவை அவ சரச் சட்டமாக கொண்டு வந் திருப்பது கண்டிக்கத்தக்கது. 90 விழுக்காடு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இடதுசாரிகள் கூறிய பல கருத் துக்கள் சட்டத்தில் இல்லை. இது தொடர்பானவற்றை நாடாளுமன்றத்தில் இடதுசாரி உறுப்பினர்கள் வலியுறுத்து வார்கள்.
தா.பாண்டியன்: அம்பானி குடும்பத்திற்கு சாதகமாக இயற்கை எரிவாயுவின் விலை 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 2014 ஏப்ரல் மாதம் விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் புதிய அரசு அமைய உள்ள நிலையில் அவசரமாக தற்போது உயர்த்த வேண்டிய தேவை என்ன? நாடாளுமன்ற நடைமுறை களையும், நெறிமுறைகளையும் மீறி கார்ப்பரேட் கம்பெனி களுக்கு நாட்டை அடமானம் வைக்கும் வேலையை மத்திய அரசு செய்துள்ளது.கனிம வளங்கள் எதுவாக இருந்தாலும் அதனை பொதுத் துறை நிறுவனங்கள் மூல மாகவே பயன்படுத்த வேண்டும். நாட்டின் செல்வாதாரத்தை பாதுகாக்க ஜனநாயக சக்தி களையும், அரசியல் கட்சிகளை யும் அணிதிரட்டுவோம்.

தொலைத் தொடர்பில் அந்நிய நேரடி முதலீடு 100%ஐ எதிர்த்து ஜூலை 9-கண்டன ஆர்ப்பாட்டம்



தொலைத் தொடர்பில் அந்நிய நேரடி முதலீடு 100%ஐ எதிர்த்து ஜூலை 9-கண்டன ஆர்ப்பாட்டம்
Read | Download





உத்தரகாண்டிற்கு உதவிக்கரம்-FORUM முடிவுகள்
Read | Download


24-07-2013 BSNL உழைக்கும் மகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டம்.BSNL WWCC DECISIONS
Read | Download




DPE has issued order for IDA revision.

DPE has issued order for IDA revision.


 Accordingly DA increase will be 4.0% with effect from 01.07.2013. The 

new rate of DA will be 78.9%. DPE order F.No.2(70)/2008-DPE (WC) GL-

XVIII/13 dated 04.07.2013.<<click here>>

Fake encounter....!

The Ishrat Jahan fake encounter is a premeditated murder: Editorial of  'The Hindu' dated 5th July, 2013.<<click here>>

Friday, 5 July 2013

- Beware! Big Brother is Watching Read | Download


பெரியண்ணன் உளவு பார்க்கிறார்-ஜாக்கிரதை-
Date: 05-07-2013
பெரியண்ணன் உளவு பார்க்கிறார்-ஜாக்கிரதை- Beware! Big Brother is Watching
Read | Download
Read | Download

என்எல்சி தொழிலாளர் வேலைநிறுத்தம் : மத்திய அரசின் அடாவடியும், நீதிமன்றத்தின் தடையும்

என்எல்சி தொழிலாளர் வேலைநிறுத்தம் : மத்திய அரசின் அடாவடியும், நீதிமன்றத்தின் தடையும்
- டி.கே.ரங்கராஜன் எம்.பி.,
சில தினங்களுக்கு முன்னாள் பாலிமர் தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு.கோபண்ணா , பிஜேபி சார்பில் எச்.ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நானும் (டி.கே.ரங்கராஜன்) கலந்து கொண்டோம். பல கேள்வி பதில்களுக்கு இடையே பாலிமர் கண்ணன் என்எல்சி பங்கு விற்பனை குறித்து எச்.ராஜாவையும் திரு. கோபண்ணாவையும் விளக்கம் கேட்டார். இரண்டு பேருமே இந்த பங்கு விற்பனை மிகவும் நியாயமானது என்றும் தங்கள் கட்சியின் நிலை பொதுத்துறை பங்கு களை தனியாருக்கு விற்பனை செய்வது தான் என்றும் எடுத்துக் கூறினர். அதற்கு தேவையான விளக்கங்களும் அளித் தனர். பிறகு என்னை நோக்கி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது காங்கிரசும் பிஜேபி-யும் ஒரே பொரு ளாதாரக் கொள்கையை கொண்டவை.
நாட்டின் செல்வத்தை தனியாருக்கு, அந் நியருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதில் இவர்களுக்கு எந்த தயக்கமும் கிடை யாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. இப் போது திரு. கோபண்ணா, எச்.ராஜா ஆகி யோர் தெரிவித்த கருத்தின் மூலம் காங் கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு கட்சி களும் ஒத்த கருத்துடைய சகோதரர்கள் தான் என்று நிரூபித்துவிட்டார்கள்.இரு கட்சிகளும் வேறு பெயர்களில் இருந்தாலும் பொருளாதாரக் கொள்கை யில் ஒரே சிந்தனையில் தான் காங்கிரசும் பிஜேபி-யும் செயல்படுகிறது என்று அந்த உரையாடல் தெளிவாக நிரூபித்து விட்டது. தொலைக்காட்சியைப் பார்த்த வர்களுக்கு இவர்களைப் பற்றி புரிவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இடதுசாரி இயக்கத்தைப் பொருத்த வரை லாபகரமாக இயங்கக் கூடிய நவரத்னா அந்தஸ்தைப் பெற்றிருக் கக் கூடிய என்எல்சி நிறுவன பங்குகளை விற்பதை ஏற்கவே முடியாது என்று குறிப்பிட்டேன்.
என்எல்சி-யில் நடக்கின்ற வேலை நிறுத்தத்ததில் தொமுச, சிஐடியு, அண்ணா தொழிலாளர் பேரவை, ஏஐடி யுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, பிஎம்எஸ் உள்ளிட்ட 17 சங்கங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த பங்கு விற்பனையை எதிர்க்கிறார். அப் படியே விற்க வேண்டுமென்று சொன் னால் 5 சதவிகித பங்கை தமிழகத்தி லுள்ள பொதுத்துறை வாங்கும் என்று அறிவித்தார். அண்ணா திராவிட முன் னேற்ற கழகம் மக்களைத் திரட்டி ஆர்ப் பாட்டம் நடத்தியுள்ளது. திராவிட முன் னேற்ற கழகமும் பங்கு விற்பனையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் துவக்கத்திலிருந்தே மத்திய சர்க்காரின் கொள்கையை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையை சமாளிக்க தமிழக அரசின் வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலிப்பதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு களை எல்லாம் காங்கிரஸ், பிஜேபி கருத்துக்களுடைய தொழிற்சங்கங்கள் சரியாகவே புறக்கணித்து வேலை நிறுத் தத் தயாரிப்பில் மும்முரமாக இருந்து வேலை நிறுத்தத்தில் 3 ஆம் தேதி யிலிருந்து இறங்கியிருப்பது பாராட்டத் தக்கது.
மாநில அரசும் மத்திய அரசும் இப்படி ஒரு நிலையை எடுத்து அறிவித்த பின் மத்திய அரசின் கீழ் இயங்கும் என்எல்சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வேலை நிறுத்தத்திற்கு இடைக் காலத் தடை பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும். நிதியமைச் சர் வார்த்தைக்கு என்எல்சி நிர்வாகம் கொடுத்திருக்கக் கூடிய மரியாதையை இது வெளிப்படுத்துகிறது.நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்துள்ள மனுவில், 1) 5 சதவிகித பங்குகளை தனி யாருக்கு விற்பது என்பது மத்திய அரசின் முடிவு. இது அரசின் இறுதி முடிவாகும். என்எல்சி மட்டுமல்ல அனைத்து பொதுத் துறையிலும் குறிப்பிட்ட பங்கு களை விற்பது என்பது மத்திய அரசு எடுத்திருக்கக் கூடிய முடிவு.2) வேலை நிறுத்தத்திற்கு முறை யான நோட்டீஸ் இல்லை.3) போராட்டத்தில் ஈடுபடுவோர் இந்தப் போராட்டம் குறித்து துண்டு பிர சுரங்கள் வழங்கி வாயிற்பகுதி கூட்டங் களை நடத்தி வருகின்றனர். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் நடந்தால் மக்களுக்கு நட்டம் ஏற்படும் என்ற என்எல்சி முறை யீட்டின் மீது நீதிமன்றம்,“ ஒட்டுமொத்த நிலவரத்தையும் கணக்கில் கொண்டு பிரச்சனை தொடர் பான பேச்சுவார்த்தை முடியும் வரை, 3 ஆம் தேதி நள்ளிரவிலிருந்தோ அல்லது அதற்குப் பிறகோ காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவதற்கு 17 தொழிற் சங்கங்களுக்கும் தடை விதிக்கிறோம் என்றும், இந்த நிர்வாகத்தின் முறையீட் டின் மீது 17 தொழிற்சங்கங்களும் பதி லளிக்க வேண்டுமென்றும் உயர்நீதிமன் றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.“ இதன் பொருள் என்னவென்றால் வேலைநிறுத் தம் கூடாது. எங்கள் விருப்பப்படி பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்போம்.
நிர்வாகத்தின் பங்காளியாக உழைப்பைக் கொடுக்கக் கூடிய தொழி லாளர்கள் தொழிற்சங்கங்களின் கருத் தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை. உற்பத்தி, உற்பத்தித் திறன் இவைகள் குறித்து நிர்வாகத்தினுடைய செயல்பாடுகள் குறித்து லாப நட்டங்கள் குறித்து தொழிற்சங்கங்களுடைய கருத் தை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்பதுதான். மக்கள் நலனைப் பற்றி கவலைப்படக் கூடிய உரிமை தொழிற் சங்கங்களுக்கு கிடையாது என்பதாகும்.இந்தப் பின்னணியில் நீதிமன்ற உத் தரவிற்குப் பின்னரும் வேலைநிறுத் தத்தை தொடர்வது என்று 17 தொழிற் சங்கங்கள் எடுத்த முடிவு பாராட்டத் தகுந்தாகும். வரலாற்றின் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.என்எல்சி தொழிலாளர்கள், அதிகாரி கள், தேசபக்த சிந்தனையுடன் செயல் படுகிறார்கள். என்எல்சி தொழிலா ளர்கள் 17 விதமான சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தாலும் ஒரே சிந்தனையுடன் செயல்படுகிறார்கள் என்பது பாராட்டத்தக்கது.
தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் தங்களுடைய பொருளாதாரக் கோரிக்கை களுக்காக மட்டும் போராடுபவர்கள் என்ற கருத்தை மாற்றும் வகையில் தேச பக்தியுடன் தொழிலைப் பாதுகாக்க, பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நிறுவப்பட்ட பொதுத்துறையை பாதுகாக்க வேலைநிறுத்தம் செய்கிறார் கள் என்பது பாராட்டத்தகுந்தது.ஒட்டுமொத்தமான தேசநலன் தமிழ் மக்கள் நலன் என்கிற உணர்வு இந்தப் போராட்டத்தில் மேலோங்கியுள்ளது என்பதை மத்திய அரசும் நீதிமன்றமும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.ஆட்சிக்கு வரத் துடிக்கும் பிஜேபி, ஆட்சியைத் தக்க வைக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சி - தேசத்தின் சொத்துக் களை அந்நிய-இந்திய பெரு முதலாளி களுக்கு தாரை வார்க்கும் கொள்கையை கைவிடக் கோரி தமிழ் மக்கள் சார்பாக தொடுக்கும் வர்க்கப் போராட்டமாக இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அமைந் துள்ளது.இந்த வேலைநிறுத்தம் வெற்றிபெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து கிறது. தமிழக ஜனநாயக சக்திகள் அனை வரும் இப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமென்றும் போராடும் தொழி லாளர்களுக்கு துணை நிற்க வேண்டு மென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.கட்டுரையாளர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்