Showing posts with label தொழிற்சங்க பயிற்சி வகுப்பு. Show all posts
Showing posts with label தொழிற்சங்க பயிற்சி வகுப்பு. Show all posts

Tuesday, 16 July 2013

தொழிற்சங்க பயிற்சி வகுப்பு

தொழிற்சங்க பயிற்சி வகுப்பு

          நமது தமிழ் மாநில சங்கம் சார்பாக விருதுநகரில் இன்று (16.07.2013) ஆறு தென் மாவட்டங்களின் கிளைச்செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க முன்னணி தோழர்களுக்கு தொழிற்சங்க பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் விருதுநகர் உட்பட ஆறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர். தோழர் K.மாரிமுத்து, மாநிலத்தலைவர் வகுப்பிற்கு தலைமை வகித்தார்.தோழர் S.ரவீந்திரன் விருதுநகர் மாவட்ட செயலாளர் அனைவரையும் வரவேற்றார்.

          தோழர் S.செல்லப்பா, மாநில  செயலாளர், சுருக்கமாக வகுப்பின் நோக்கம் குறித்து உரையாற்றித் தொடங்கி வைத்தார். தோழர் P.அபிமன்யு, பொது செயலாளர் பேசுகையில் விகிதாசார அடிபடையில் அங்கீகாரம் என்பதில் நமது சங்க அங்கீகாரம் என்றும் உத்திரவாதப்படுத்தப்பட்டு உள்ளதை சுட்டிக் காட்டினார். 7 ஆவது சரிபார்ப்பு தேர்தலில் மீண்டும் நமது சங்கமே முதன்மை சங்கமாக வெற்றி பெரும் என அறுதியிட்டு கூறினார். கொல்கத்தா மத்திய செயற்குழு கூட்டத்தின் முடிவுகள் பற்றியும் விரிவாக கூறினார். அதே நேரம் நமது நிறுவனத்தை லாபகரமாக மீட்சி செய்ய வேண்டிய அவசியம் பற்றியும், பணி கலாச்சாரம் மேம்பட வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டி காட்டினார்.

          78.2% IDA இணைப்பில் நமது சங்கத்தின் பங்களிப்பு  தான் பிரதானமானது  என்பதையும் அவர் சூளுரைத்தார்.வர இருக்கின்ற போராட்டங்களை விளக்கி மாநில, மாவட்ட  செயற்குழுக்களை  கூட்டி ஊழியர்களிடம்  போராட்ட உணர்வை வளர்க்க அனைவரும் முயற்சி எடுக்க பொது செயலர் வலியுறுத்தினார்.
மத்திய சங்கத்தின் புகைப்படங்கள் : CLICK HERE
மேலும் புகைப்படங்கள் : CLICK HERE