Showing posts with label செயல்பாட்டுக்கு தடை போடும் உத்தரவை திரும்பப் பெறக் கோரி. Show all posts
Showing posts with label செயல்பாட்டுக்கு தடை போடும் உத்தரவை திரும்பப் பெறக் கோரி. Show all posts

Thursday, 11 July 2019

செயல்பாட்டுக்கு தடை போடும் உத்தரவை திரும்பப் பெறக் கோரி



செயல்பாட்டுக்கு தடை போடும் உத்தரவை திரும்பப் பெறக் கோரி நிர்வாகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்
உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என 02.07.2019 தேதியிட்ட கடித எண்: BSNL/5-1/SR/2018 மூலமாக விண்ணப்பித்திருக்கும் அனைத்து சங்கங்களின் பொதுச்செயலாளர்களுக்கும் BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் அங்கீகாரம் 2019, மே மாதத்துடன் முடிவடைந்து விட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் விண்ணப்பித்திருக்கும் சங்கம், ஏதாவது போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்றால் அந்த சங்கத்தை உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் மிரட்டல் விடப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இந்த வாதம் பொருத்தமற்றது மட்டுமல்ல, நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுவதும் ஆகும். இந்த அர்த்தமற்ற கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என நிர்வாகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. பதிவு செய்யப்பட்ட சங்கம் என்ற அடிப்படையில், சட்டபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட BSNL ஊழியர் சங்கத்திற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. இது தொடர்பாக முதன்மை தொழிலாளர் நல ஆணையரிடமும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் எனில், தனது தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க, BSNL ஊழியர் சங்கம் நீதிமன்றத்திற்கும் செல்லும்.