Showing posts with label அமைச்சர்கள் குழு கூட்டம். Show all posts
Showing posts with label அமைச்சர்கள் குழு கூட்டம். Show all posts

Friday, 19 July 2019

அமைச்சர்கள் குழு கூட்டம்





அமைச்சர்கள் குழு கூட்டம்



BSNL தொடர்பாக உருவாக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் கூட்டம் முடிவேதும் எடுக்காமல் முடிவடைந்தது.
மத்தியில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின் BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் புத்தாக்கம் தொடர்பாக பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வதந்திகள், செய்திகள் என பல, பல நோக்கங்களோடு உலா வந்து ஊழியர்கள் மத்தியில் குழுப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. அமைச்சரவை செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலக செயலாளர் ஆகியோரின் தலைமையில் பல கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. திடீரென உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களின் புத்தாக்கம் தொடர்பாக பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வந்தன. அந்தக் குழுவில் தொலை தொடர்பு அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் மற்றும் நிதியமைச்சர் திருமிகு நிர்மலா சீதாராமன் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அந்த அமைச்சர்களின் குழுக் கூட்டம் 16.07.2019 அன்று கூடியது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்தக் கூட்டம், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளது. அடுத்தது என்ன?