நெல்லை தொலைபேசி நிலையத்தில் தோழர் முத்துதிருபரன் தலைமையில் தோழர் P. ராஜகோபால் சங்க கொடியை ஏற்றினார்
Tuesday, 22 March 2022
Thursday, 10 March 2022
கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்*
*கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்*
-----------------------------------------------------------------
நெல்லை மாவட்டம்
-----------------------------------
*BSNLEU - AIBDPA - TNTCWU* ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெல்லை ஸ்ரீபுரம் தொலைபேசி நிலையம் முன்பு இன்று 10.03.2022 மதியம் சுமார் 1.30 மணியளவில் கருப்பு அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
AIBDPA மாவட்ட செயலர் *தோழர் ச.முத்துசாமி* தலைமை தாங்கினார்.
BSNLEU மாவட்ட செயலர் *தோழர்*
*N.சூசை மரிய அந்தோணி* வரவேற்புரை நிகழ்த்தினார்.
BSNLEU மாநில அமைப்பு செயலாளர் *தோழியர் V சீதாலட்சுமி* கோரிக்கையை விளக்கிப் பேசினார்.
TNTCWU மாவட்ட செயலர் *தோழர் P. ராஜகோபால்* நன்றி கூறினார்.
அதன் பின்னர் *GM அவர்களிடம் மெமோரான்டம்* கொடுக்கப்பட்டது.
இவண்
*BSNLEU-AIBDPA-TNTCWU*
ஒருங்கிணைப்புக் குழு
நெல்லை மாவட்டம்.
_10-03-2022._
Monday, 28 February 2022
ALTTC, BSNL வசமே இருக்கும்
ALTTC, BSNL வசமே இருக்கும்
அனைவருக்கும் வாழ்த்துக்கள். AUABயின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, ALTTC பிரச்சனையில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என DoT, இன்று (25.02.2022) ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது. ALTTC, BSNL வசமே இருக்கும் என்பதே அதன் பொருள். நிரந்தரமாக ALTTC, BSNL வசமே இருப்பதை AUAB உறுதி செய்யும்.
Wednesday, 23 February 2022
*10 வது மாவட்ட மாநாடு
Tuesday, 20 April 2021
வரலாற்று சாதனை- ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகையில் 20.47 கோடி ரூபாய்கள் இன்று பட்டு வாடா செய்யப்பட்டது.
ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும், BSNL ஊழியர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டம் ஏராளம்.. ஏராளம்...
ஆனாலும் நிர்வாகம் அசைய மறுத்தது. வேறு வழியின்றி நீதி மன்றத்தை நாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. உழைக்கும் மக்கள் நீதியை பெறுவது கூட அசாதாரனமானது என்பதை புரிந்துக் கொண்ட நமது சங்கங்கள், உழைக்கும் மக்களின் சிரமங்களை முழுமையாக புரிந்துக் கொண்ட ஒரு வழக்கறிஞர், அதுவும் ஒரு மூத்த வழக்கறிஞர் தேவை என்பதை உணர்ந்து, பிரபல வழக்கறிஞர் தோழர் N.G.R.பிரசாத் அவர்களை உரிய முறையில் அணுகினோம். அவர் ஒரு பைசா கூட முன்பணம் வாங்காமல் ஏற்றுக் கொண்டு திறம்பட வாதாடினார். அவரது வாத திறமையால் இன்று நமது நெடு நாளைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
முதல் கட்டமாக 1857 ஒப்பந்த தொழிலாளிக்கு 6.10 கோடி ரூபாயும், இரண்டாம் கட்டமாக 2902 ஒப்பந்த தொழிலாளிக்கு 8.40 கோடி ரூபாயும், மூன்றாவது கட்டமாக இன்று (20.04.2021) 4668 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20.47 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 34.98 கோடி ரூபாய் நீதி மன்ற உத்தரவு மூலம் பெற்றுள்ளோம். மொத்தத்தில் 4759 ஒப்பந்த தொழிலாளிகளுக்கு சுமார் 34.98 கோடி ரூபாயை ஒப்பந்தகாரர்களுக்கு பதிலாக மத்திய தொழிலாளர் நல அதிகாரிகள் மூலம் பெற்று சரித்திர சாதனை படைத்து விட்டோம்..
இது சாதாரண நிகழ்வு அல்ல..
தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமான சாதனை.. BSNL-லில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வெற்றி..
வழக்கு மன்றத்தில் நமக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் மரியாதைக்குரிய திரு N.G. R பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் சதீஸ்குமார், ராம் சித்தார்த் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்..
நமக்காக உழைத்திட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் நமது நன்றிகளும், வாழ்த்துக்களும்...
நமக்கு மிகச்சரியாக வழிகாட்டிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் தலைவர் தோழர் P.சம்பத் அவர்களுக்கும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களுக்கும், BSNLCCWF பொதுச்செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்,...
நமது சங்கங்களின் மீது நம்பிக்கை வைத்து, கடுமையான பிரச்சனைகளை சந்தித்த போதும், உறுதியாக சங்கங்களின் பின் நின்ற அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கு எப்போதும், ஆதரவாக அரவணைத்து நின்று வழிகாட்டிய BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட, கிளை மட்ட தலைவர்களுக்கும், உதவிக்கரம் நீட்டிய ஓய்வூதியர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்....
வாங்கிய சம்பளத்தில் உள்ள முரண்பாடு, EPF, ESI பிரசனை ஆகியவற்றை அடுத்து சரி செய்வோம்.
நாம் தோற்றதில்லை.. தோற்கப் போவதுமில்லை..
Friday, 9 April 2021
காலம் 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
BSNL ஓய்வூதியர்களின், BSNL MRS அட்டையின் காலம் 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத ஊதியம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், ஏப்ரல் மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் CMD BSNLக்கு கடிதம்