Tuesday, 22 March 2022

சங்கத்தின் அமைப்பு தினம்

 


நெல்லை தொலைபேசி நிலையத்தில் தோழர் முத்துதிருபரன் தலைமையில் தோழர் P. ராஜகோபால் சங்க கொடியை ஏற்றினார்

Thursday, 10 March 2022

கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்*

 *கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்* 

-----------------------------------------------------------------

நெல்லை மாவட்டம்

-----------------------------------

 *BSNLEU - AIBDPA  - TNTCWU* ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெல்லை ஸ்ரீபுரம் தொலைபேசி நிலையம் முன்பு இன்று 10.03.2022   மதியம் சுமார் 1.30 மணியளவில்  கருப்பு அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  


AIBDPA மாவட்ட செயலர் *தோழர் ச.முத்துசாமி*  தலைமை தாங்கினார். 


BSNLEU  மாவட்ட செயலர் *தோழர்* 

 *N.சூசை மரிய அந்தோணி*  வரவேற்புரை நிகழ்த்தினார்.


BSNLEU மாநில அமைப்பு செயலாளர் *தோழியர் V சீதாலட்சுமி* கோரிக்கையை விளக்கிப் பேசினார். 


TNTCWU மாவட்ட செயலர் *தோழர் P. ராஜகோபால்* நன்றி கூறினார். 


அதன் பின்னர்  *GM அவர்களிடம் மெமோரான்டம்* கொடுக்கப்பட்டது.


இவண்

 *BSNLEU-AIBDPA-TNTCWU* 

ஒருங்கிணைப்புக் குழு

நெல்லை மாவட்டம்.

 _10-03-2022._

Monday, 28 February 2022

ALTTC, BSNL வசமே இருக்கும்

 

ALTTC, BSNL வசமே இருக்கும்

அனைவருக்கும் வாழ்த்துக்கள். AUABயின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, ALTTC பிரச்சனையில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என DoT, இன்று (25.02.2022) ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது. ALTTC, BSNL வசமே இருக்கும் என்பதே அதன் பொருள். நிரந்தரமாக ALTTC, BSNL வசமே இருப்பதை AUAB உறுதி செய்யும்.

Wednesday, 23 February 2022

*10 வது மாவட்ட மாநாடு


தோழர்களே  !வணக்கம் !!

 நமது  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பத்தாவது மாவட்ட மாநாடு மிகவும் எழுச்சியுடன் உற்சாகமாக 22-02-2022 அன்று காலை ஒன்பது மணிக்கு நெல்லை தொலைபேசி நிலையத்தில் உள்ள மாநாட்டு அரங்கம் தோழர் D.கோபாலன் நினைவு அரங்கத்தில் துவங்கியது.

மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் தோழர் V. ஆண்டபெருமாள் தலைமை தாங்கினார்.

மாநாட்டின் முதல் நிகழ்வாக தேசியக்கொடியினை மாவட்டப் பொருளாளர் தோழர் S.சங்கரநாராயணன் ஏற்றிவைத்தார்.

 சங்க கொடியினை மாவட்டத் துணைத்  தலைவர் தோழர் E.நடராஜன் ஏற்றி வைத்தார்.

 மாவட்ட உதவி செயலர் தோழர் S.அழகு நாச்சியார் தியாகிகளுக்கு அஞ்சலி உரையை நிகழ்த்தினார்.

 மாவட்டச் செயலர் தோழர் N. சூசை மரிய அந்தோணி மாநாட்டிற்கு வருகை தந்த அனைத்து தோழர்களையும்  வரவேற்கும் முகமாக வரவேற்புரை நிகழ்த்தினார்.

 BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார்.

 மாநில தலைவரும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர் S.செல்லப்பா சிறப்புரையாற்றினார்.

 BSNL பொது மேலாளர் மரியாதைக்குரிய பிஜி பிரதாப் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

 மாநில அமைப்புச் செயலர் தோழியர் V. சீதாலட்சுமி எழுச்சியுரையாற்றினார்.

 உயர்திரு S. கிருஷ்ணகுமார் DGM(Admin) ,உயர்திரு G. வீராசாமி DGM(IM) ஆகியோர்
கருத்துரை வழங்கினர்.

 உயர்திரு M. மணிமாறன் DGM(BBC) வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.

BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி , BSNLEU தூத்துக்குடி மாவட்ட செயலர் தோழர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

AIBDPA சங்கத்தின் சார்பில் தலைவர்களுக்கு பொன்னாடை போற்றப் பட்டது.

 AIBDPA மாவட்ட செயலாளர் தோழர் S. முத்துசாமி , TNTCWU  மாவட்ட செயலர் தோழர் P.ராஜகோபால் , NFTE BSNL மாவட்ட செயலாளர் தோழர் C.நடராஜன், AIGETOA மாவட்ட செயலாளர் தோழர் K. விஜய் மணிகண்ட ராஜ், SNEA BSNL மாவட்ட செயலாளர் தோழர் V. பாலசுப்ரமணியன், SEWA BSNL மாவட்டச் செயலர் தோழர் K  விஜய் , AIBSNLEA மாவட்டச் செயலாளர் தோழர் N. அருணாச்சலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆய்வுப் பொருளாக :-

1.செயல்பாட்டு அறிக்கை
2.அமைப்பு நிலைவிவாதம்
3. வரவு செலவு கணக்கு
4. நிர்வாகிகள் தேர்வு  ஆகியவை நடைபெற்றது.

தோழர் S.சங்கரநாராயணன் மாவட்டப் பொருளாளர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

புதிய நிர்வாகிகளாக
 தோழர் V. ஆண்டபெருமாள் , மாவட்டத் தலைவராகவும்,
 தோழர் N.சூசை மரிய அந்தோணி, மாவட்டச் செயலராகவும்,
 தோழர் M.நாசர் தீன், மாவட்டப் பொருளாளராகவும் உள்ளிட்ட 19 தோழர்கள்
ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 மாநாட்டின் நிறைவாக மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் P. அலாவுதீன் நன்றியுரையாற்றினார் .

மாவட்ட மாநாடு மாலை ஆறு மணி அளவில் இனிதே நிறைவு பெற்றது.

 கலந்துகொண்ட அத்தனை அதிகாரிகளுக்கும்,தலைவர்களுக்கும், மாவட்ட செயலர்களுக்கும், மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், முன்னணி தோழர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

 தோழமையுடன்
 N. சூரிய மரிய அந்தோணி , 
மாவட்ட செயலர்,
 BSNLEU ,
திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டம்.
 22-02-2022.

Tuesday, 20 April 2021

 வரலாற்று சாதனை- ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகையில் 20.47 கோடி ரூபாய்கள் இன்று பட்டு வாடா செய்யப்பட்டது.

BSNL நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில், உழைப்பு சுரண்டல் கடுமையாக நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது. சுரண்டப்பட்டு வரும் அந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தையும் வருடக்கணக்கில், நிர்வாகம் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு வருகிறது.

ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும், BSNL ஊழியர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டம் ஏராளம்.. ஏராளம்...

ஆனாலும் நிர்வாகம் அசைய மறுத்தது. வேறு வழியின்றி நீதி மன்றத்தை நாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. உழைக்கும் மக்கள் நீதியை பெறுவது கூட அசாதாரனமானது என்பதை புரிந்துக் கொண்ட நமது சங்கங்கள், உழைக்கும் மக்களின் சிரமங்களை முழுமையாக புரிந்துக் கொண்ட ஒரு வழக்கறிஞர், அதுவும் ஒரு மூத்த வழக்கறிஞர் தேவை என்பதை உணர்ந்து, பிரபல வழக்கறிஞர் தோழர் N.G.R.பிரசாத் அவர்களை உரிய முறையில் அணுகினோம். அவர் ஒரு பைசா கூட முன்பணம் வாங்காமல் ஏற்றுக் கொண்டு திறம்பட வாதாடினார். அவரது வாத திறமையால் இன்று நமது நெடு நாளைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

முதல் கட்டமாக 1857 ஒப்பந்த தொழிலாளிக்கு 6.10 கோடி ரூபாயும், இரண்டாம் கட்டமாக 2902 ஒப்பந்த தொழிலாளிக்கு 8.40 கோடி ரூபாயும், மூன்றாவது கட்டமாக இன்று (20.04.2021) 4668 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20.47 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 34.98 கோடி ரூபாய் நீதி மன்ற உத்தரவு மூலம் பெற்றுள்ளோம். மொத்தத்தில் 4759 ஒப்பந்த தொழிலாளிகளுக்கு சுமார் 34.98 கோடி ரூபாயை ஒப்பந்தகாரர்களுக்கு பதிலாக மத்திய தொழிலாளர் நல அதிகாரிகள் மூலம் பெற்று சரித்திர சாதனை படைத்து விட்டோம்..

இது சாதாரண நிகழ்வு அல்ல..

தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமான சாதனை.. BSNL-லில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வெற்றி..

வழக்கு மன்றத்தில் நமக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் மரியாதைக்குரிய திரு N.G. R பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் சதீஸ்குமார், ராம் சித்தார்த் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்..

நமக்காக உழைத்திட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் நமது நன்றிகளும், வாழ்த்துக்களும்...

நமக்கு மிகச்சரியாக வழிகாட்டிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் தலைவர் தோழர் P.சம்பத் அவர்களுக்கும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களுக்கும், BSNLCCWF பொதுச்செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்,...

நமது சங்கங்களின் மீது நம்பிக்கை வைத்து, கடுமையான பிரச்சனைகளை சந்தித்த போதும், உறுதியாக சங்கங்களின் பின் நின்ற அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கு எப்போதும், ஆதரவாக அரவணைத்து நின்று வழிகாட்டிய BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட, கிளை மட்ட தலைவர்களுக்கும், உதவிக்கரம் நீட்டிய ஓய்வூதியர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்....

வாங்கிய சம்பளத்தில் உள்ள முரண்பாடு, EPF, ESI பிரசனை ஆகியவற்றை அடுத்து சரி செய்வோம்.

நாம் தோற்றதில்லை.. தோற்கப் போவதுமில்லை..

Friday, 9 April 2021

காலம் 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 BSNL ஓய்வூதியர்களின், BSNL MRS அட்டையின் காலம் 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

BSNL ஓய்வூதியர்களின், BSNL MRS அட்டையின் காலம் இதற்கு முன்னர், 30.03.2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்றின் அபாயம் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு, BSNL ஓய்வூதியர்களின், BSNL MRS அட்டையின் காலத்தை, 30.09.2021 வரை, அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டித்து, கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

 மார்ச் மாத ஊதியம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், ஏப்ரல் மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் CMD BSNLக்கு கடிதம்

2021 மார்ச் மாத ஊதியத்தை வழங்கியதற்காக, ஊழியர்கள் சார்பாக, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள், CMD BSNLக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஒவ்வொரு மாதமும் கால தாமதமாக ஊதியம் வருவதால் ஏற்படும் சிரமங்களில் இருந்து ஊழியர்களை காப்பாற்றும் விதமாக, ஏப்ரல் மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க வேண்டும் என்றும், அவர் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.