Tuesday 16 July 2013

தோழர் M .பெருமாள்சாமி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா


          ‘வேலைக் கலாச்சார மேம்பாடு’ கருத்தரங்கம் மற்றும் தோழர் M.பெருமாள்சாமி அவர்களின் பணி ஓய்வு  பாராட்டு விழா 16-07-2013 அன்று VVS கல்யாண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. தோழர் R.ரசூல், மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார். கருத்தரங்கை தோழர் C.வெங்கடேஷ்  அவர்கள் துவக்கி வைத்து பேசினார். நமது தமிழ் மாநில செயலர் S.செல்லப்பா அவரைத் தொடர்ந்து பேசினார். முத்தாய்ப்பாக  விருதுநகர் BSNL பொது மேலாளர் உயர்திரு B.V.பாலசுப்ரமணியா, ITS அவர்கள் பேசினார். தான் அறிந்த வரையில் விருதுநகர் மாவட்டத்தில் பணிக் கலாச்சாரம் சிறப்பாக இருப்பதாகவும், அதனை மேலும் செலுமைப்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
          தோழர் M.பெருமாள்சாமி அவர்களின் பணி ஓய்வை பாராட்டி நமது பொது செயலர் P.அபிமன்யு, மாநில செயலர் தோழர் S.செல்லப்பா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொது செயலர் தோழர் சாமுவேல் ராஜ், தோழர் தேனி வசந்தன், நாகர்கோயில் மாவட்ட செயலர் தோழர் ஜார்ஜ், மதுரை மாவட்ட செயலர் தோழர் சூரியன், AIBSNLEA வைச் சேர்ந்த திரு. T. ராதாகிருஷ்ணன், V.K.பரமசிவம், SNEA மாவட்ட செயலர் திரு. G.செல்வராஜ், ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர்  தோழர் R.முனியசாமி, ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் மோகன்தாஸ், ஓய்வு  ஊதியர் சங்க செயலர் M.அய்யாசாமி, தோழர் முருகேசன், மாநில உதவி செயலர் தோழர் C .பழனிசாமி, LIC செயலர் தோழர் மகாலிங்கம், தமிழ் நாடு அரசு ஓய்வு  ஊதியர் சங்க செயலர் தோழர் முருகேசன், NFTE மாவட்ட செயலர் தோழர் சக்கணன், இந்திய தொழிற்சங்க மையத்தின் தோழர் லட்சுமி மற்றும் பெரும் திரளான முற்போக்கு தோழர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்.
புகைப்படத் தொகுப்பிற்கு <இங்கே அழுத்தவும்>

No comments:

Post a Comment