Wednesday 14 March 2018

போய்ட்டு வாங்க சார்.......

*செத்தா செத்ததுதான், நோ சொர்க்கம்.. நோ நரகம்.. மறக்க முடியாத ஹாக்கிங்.*

*Stephen Hawking*

*நன்றி  One India Tamil வலைப்பதிவு.*

*லண்டன்:*

உலகத்தில் உள்ள அத்தனை சோம்பேறிகளும் படிக்க வேண்டிய பாடம் ஸ்டீபன் ஹாக்கிங். *எதுவுமே செய்யாமல் முடங்கிப் போகும் மனிதர்களுக்கு மத்தியில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய உந்து சக்தியாக திகழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.*

எதையுமே அறிவியல் பூர்வமாக மட்டுமே பார்க்கக் கூடியவர் ஹாக்கிங். *நீ சீக்கிரம் செத்துப் போய் விடுவாய் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர் ஹாக்கிங். அவருக்கு அப்போது 21 வயதுதான். மோட்டார் நியூரான் பாதிப்புக்குள்ளாக்கி சக்கர நாற்காலியில் முடங்கியது அவரது வாழ்க்கை. ஆனால் அவர் முடங்கவில்லை.*

மரணத்துக்கே தண்ணி காட்டி வந்தவர். அசாத்தியமான புத்திசாலி. "*மரணம் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது நிச்சயம் ஒரு நாள் வரும். ஆனால் அது வருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது."* என்று கூறியவர் ஹாக்கிங்.

மறு பிறவி. சொர்க்கம், நரகம்..இவையெல்லாம் நிஜமா.. நாம் இறந்த பின்னர் என்ன ஆவோம்.. எங்கு போவோம்... நமது உயிர் என்னாகும்.. ஆவி, பேய் உண்டா.. இதற்கெல்லாம் விடை தெரியாமல் அத்தனை பேருமே அலை பாய்ந்தபடிதான் உள்ளோம். ஆனால் இது எதுவுமே கிடையாது. *இறப்போடு எல்லாம் முடிந்து போய் விடும்* என்று அடித்துக் கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

*மறு பிறவி கிடையாதுங்க.*

மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம் என்பதோ கிடையாது என்றும் ஹாக்கிங் திட்டவட்டமாக கூறியவர்.*அதெல்லாம் ஜாலிக்காக பரப்பப்பட்ட கட்டுக்கதைகள் என்றும் ஹாக்கிங் கூறியுள்ளார்.* மக்களின் மரண பயத்தை போக்கவே இதுபோன்ற கதைகளை சிலர் கிளப்பி விட்டதாகவும், அதுவே வழி வழியாக மக்களின் நம்பிக்கையாக மாறிப் போய் விட்டதாகவும் கூறுகிறார் ஹாக்கிங்.

*மூளை இருக்கும் வரைதான்.*

இதுகுறித்து ஹாக்கிங் ஒரு முறை கூறுகையில் மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது.

"*நான் கடந்த 49 வருடமாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. ஆனால் மரணிக்க நான் அவசரப்படவில்லை.நிறைய செய்ய வேண்டும் நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன்.பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. அதையெல்லாம் செய்ய வேண்டும்."*

*சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லை.*

மூளையும் ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் அது செயலிழந்து போகுமோ அதுபோலத்தான் மூளையும். *மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.*

*கட்டுக்கதைகள்.*

மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் அவை என்றவர் ஹாக்கிங். *இதுகுறித்து தனது The Grand Design என்ற நூலிலும் விரிவாகப் பேசியுள்ளார் ஹாக்கிங்.*

என்னதான் இயல்பாக ஹாக்கிங் மரணத்தை அவரைப் போலவே நமது மனம் ஏற்றுக் கொண்டாலும் கூட இன்னும் சில காலம் இவர் வாழ்ந்திருக்கலாம் என்ற நப்பாசை ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை

*நமது காலத்தில் நாம் சந்தித்த மாபெரும் ரோல் மாடல் ஹாக்கிங்.. போய்ட்டு வாங்க சார்.*

Wednesday 7 March 2018



இன்று உலக மகளிர் தினம் (International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை. 

1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. 

தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மகளிர் தின கருப்பொருளாக ஐ. நா முன்மொழிந்திருக்கும் நோக்கம், '' பெண்களுக்கு எதிரான வன்முறையை ௦௦௦௦தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம்" என்பதே.

Tuesday 6 March 2018

 thanks to BSNL Board of Directors for their positive role in Wage Revision issue.
The representatives heartily thanked the CMD BSNL and other Members of the BSNL Board, for playing a very positive role in the Wage Revision issue, as a result of which the All Unions and Associations of BSNL was able to successfully clinch the issue with the Hon'ble Minister, in the meeting held on 24-02-2018.

B) Strong opposition to curtailment of Medical facilities of serving and retired employees.
The representatives handed over the letter of the Union, opposing curtailment of medical facilities of the serving and retired employees. They told the CMD BSNL that, the employees are agitated over the decision of the Management to reduce the ceiling from 25 days to 12 days ( ceiling for outdoor treatment), as well as the decision to withdraw the facility of "payment without voucher" for retired employees, in cities covered by CGHS scheme. The representatives briefly pointed out how substantial savings could be made, by reducing wasteful expenditure, and demanded to convene an all union/association meeting, to take concrete decisions on reducing wasteful expenditure. The CMD BSNL assured to look into the issue.

C) Opposition to taking over of BSNL's office space by TERM CELL.
The representatives requested the CMD BSNL to stop the handing over of BSNL's office space to TERM CELL at Jammu, so that the CGM office, Jammu, could be shifted to that place, from the rented place in which it is functioning presently. The CMD BSNL assured to do the needful.