Sunday 30 June 2019

உண்ணாவிரத போராட்டம்...


BSNL க்கு 4G அலைக்கற்றை ஒதுக்க்டு செய்க, ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை ஊதியங்களை உடனே வழங்குக மற்றும் ஆட்குறைப்பு செய்யாதே என CITUவின் பொதுச்செயலாளர் தோழர் தபன் சென் மத்திய தொலை தொடர்பு அமைச்
BSNLன் நிதி நிலைமை தொடர்பாக மீடியாக்களில் வரும் செய்திகள் கவலையடையச் செய்துள்ளதாக தெரிவித்து CITU வின் பொதுச்செயலாளர் தோழர் தபன் சென் அவர்கள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 4G அலைக்கற்றையை உடனடியாக BSNLக்கு வழங்க வேண்டும் என்றும் அந்நிறுவனத்தின் வலைத்தள விரிவாக்கத்திற்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தர வேண்டிய ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அவர்களை ஆட்குறைப்பு செய்வதை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதிகப்படியான பணி ஓய்வுகள் தொடர்ந்து வருவதால், விருப்ப ஓய்வு திட்டம் மற்றும் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைப்பது ஆகிய முன்மொழிவுகளை கைவிட வேண்டும் என்றும் CITUவின் பொதுச்செயலாளர் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

BSNL CMD ஆக இருந்த திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா பணி ஓய்வு



திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா பணி ஓய்வினை ஒட்டி தற்காலிக BSNL CMDஆக MTNL CMD திரு P.K.புர்வார் 3 மாதங்களுக்கு செயல்படுவார்.
BSNL CMD ஆக இருந்த திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா பணி ஓய்வு பெற்றுள்ளதை ஒட்டி இடைக்காலமாக MTNLvCMD திரு P.K. Purwar, CMD BSNL ஆக கூடுதலாக செயல்படுவார் என்றும், அவர் 3 மாத காலத்திற்கு அல்லது நிரந்தரமான CMD BSNL நியமிக்கப்படும் வரை இந்த பதவியில் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday 26 June 2019

தொடர் உண்ணாவிரத போராட்டம்.




2019 ஜூலை2,3,4 தேதிகளில் BSNLEU & TNTCWU மாநில சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்...

தோழர்களே..
BSNL ல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள நிலுவை என்பது 4 முதல் 6 மாதங்கள் என உயர்ந்து கொண்டே போகிறது.  நிறுவனத்தின் நிதி நிலைமையை நிர்வாகம் காரணம் காட்டுகிறது.  மற்றவற்றிற்கு கடன் சொல்ல முடியும்.  பசிக்கும் வயிற்றிற்கும், பாலுக்கு அழும் குழந்தைகளுக்கும் நம்மால் பதில் சொல்ல முடியவில்லை.  அரசின் கொள்கைகளால் BSNL என்கிற பொதுத்துறை மட்டுமல்ல; அதில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் குடும்பங்களும் பசியோடும் பட்டினியோடும் பரிதவிக்க வேண்டிய நிலை.  இதனை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் நம் இரு சங்கங்களும் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்துவோம்.
                                                                                                                                                                                                                    பிரச்சனைக்கு முடிவு எட்டும் வரை போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்..

அடுத்த கட்டமாக BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU ஆகியவற்றின் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜூலை 2,3,4 தேதிகளில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது..

மாவட்ட மட்ட போராட்டத்திற்கு பிறகு விரைவில் சென்னையில் சங்கமிப்போம்..

போராட்டமே நமது ஆயுதம்..வெற்றியே நமது இலக்கு..

இந்த போராட்டங்களை வலுவாக நடத்திடுவோம்.  ஊதியத்தை பெற்றிடுவோம்.

ஒன்றுபடுவோம்..
போராடுவோம்..
வெற்றி பெறுவோம்..

BSNLEU & TNTCWU
மாநிலச் சங்கங்கள்..

GM(Rectt) உடன் BSNL ஊழியர் சங்கம் சந்திப்பு



GM(Rectt) உடன் BSNL ஊழியர் சங்கம் சந்திப்பு
BSNL ஊழியர் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் தோழர் சுவபன் சக்கரவர்த்தி அவர்கள் 17.06.2019 அன்று GM(Rectt) திருமிகு சமிதா லூத்ரா அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தார். 

JTO LICE தேர்வு முடிவுகள்:- 26.05.2019 அன்று நடைபெற்ற 2017-18ஆம் ஆண்டிற்கான JTO LICE தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்து, தவறான/ பல சரியான மற்றும் குழப்பமான பதில்களை கொண்டிருக்கும் கேள்விகளுக்கும், பாடப்பகுதிக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் முழுமையான மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்க வேண்டும் என நமது சங்கத்தின் சார்பில் கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த GM(Rectt) அவர்கள் STANDARD OPERATION PROCEDURE படி கேள்வித்தாள் குறித்த ஊழியர்களின் குறைகள் தொடர்பாக பரிசீலிக்க நிபுனர் குழு ஒன்றை ஏற்கனவே அமைத்து விட்டதாக தெரிவித்தார். BSNL ஊழியர் சங்கம் கொடுத்துள்ள விவரங்களை அந்த நிபுனர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு குறைந்த கால அளவிற்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

TT LICE தேர்விற்கான கட்டணம் திரும்ப பெற வேண்டும்:- 08.09.2019 அன்று நடைபெற உள்ள TT LICE தேர்விற்கு நிர்வாகம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளதை திரும்ப பெற வேண்டும் என்றும், கடந்த காலங்களில் இம்மாதிரியான தேர்வு கட்டண முறை இருந்ததில்லை என்றும் நமது சங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பிரச்சனையில் தலையிட்டு கவனிப்பதாக GM(Rectt) உறுதி அளித்துள்ளார்.

JE இலாகா தேர்விற்கான தேதியை அறிவிக்க வேண்டும்:- JE இலாகா தேர்வினை OFF LINE மூலமாக நடத்த வேண்டும் என்கிற BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கையினை நிர்வாகம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டது. எனினும் தேர்விற்கான தேதியினை கார்ப்பரேட் அலுவலகம் இன்னமும் இறுதி செய்யாமல் உள்ளது. இந்த பிரச்சனையை நமது சங்கத்தின் சார்பாக முன் வைத்த போது, அதற்கன பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், அனேகமாக ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேர்வு நடைபெறும் என்றும் GM(Rectt) தெரிவித்தார். 

Friday 21 June 2019

இரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு



இரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு  தட்சிணா இரயில்வே எம்பிளாய் ஸ் யூனியன்  (DREU _ CITU) எதிர்ப்பு

__________
எரிவாயு மானியம் போல ரயில் மானியத்தையும் ஒழிக்கிறது மோடி அரசு....கட்டணம் கடுமையாக உயரும்

ரயில்வே தனியார்மயம் எனும் மோடியின் திட்டம் அமலானால் சாமானி யர்கள்  ரயில்களில் பயணம் செய்ய ஆம்னி பேருந்து கட்டணத்தை விட அதிகமாக கொடுத்தாக வேண்டும். மேலும் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்க நடத்தப்பட்ட உஜ்வாலா பிரச்சாரம் போன்று ரயில் கட்டணத்தில் உள்ள 47 விழுக்காடு மானியத்தை விட்டுக்கொடுக்கும்படி பயணிகளிடம்  கருத்து கேட்கப் போவதாகவும் ரயில்வே அடுத்த அதிர்ச்சி யான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மானியம் ரத்து செய்யப்பட்டால் 53 ரூபாய்டிக்கெட் ரூ.100 ரூபாயாக உயரும். மோடியின்  முதலாவது அரசில் எரிவாயு மானியம்
ஒழித்துக்கட்டப்பட்டது. மோடியின்2வது இன்னிங்ஸ் ரயில்வே  மானியத்தை ஒழித்துக்கட்டப்போகிறது.   இந்த திட்டம்விவேக் தேவ்ராய் கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்றுதான். என்ன வித்தியாசம் என்றால் ரயில்வே வளர்ச்சி ஆணையம் அமைத்து  அதன் மூலம் தனியார் மயத்தை அமல்படுத்தவேண்டும் என்று அந்த கமிட்டி கூறியிருந்தது. ஆனால் தற்போது ரயில்வே வாரியம்  மூலமாகவே இதை அமல்படுத்த மோடி அரசு முடிவு செய்துள்ளது.
விவேக் தேவ்ராய்க்கு முன்பே  மற்றொரு நாசகர பொருளதார ஆலோசகரான ராகேஷ்மோகன் ரயில்வே துறையில் பல மாற்றங்களை செய்தாகவேண்டும் என்று பரிந்துரைகளை அளித்திருந்தார். ரயில்வே பணிகளில் தனியாரை ஈடு படுத்துவது, சரக்குபோக்குவரத்தை தனியாருக்கு திறந்துவிடுவது ஆகும். இந்தபரிந்துரைகள் மொதுவாகத்தான் அமல் படுத்தப்பட்டன. ஆனால் மோடி அரசு  மிக
வேகமாக தனியார் மயத்தை நோக்கிச் செல்கிறது என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்(சிஐடியு) செயல் தலைவர் ஆர்.இளங்கோவன். ஏற்கனவே பல ஆண்டுகளாக தனியாக
தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட் ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் ஒன்றாக இணைத்தபோதே தொழிற்சங்கங்கள் எச்சரித்தன.

  காரணம், ரயில்வே மிக விரைவில் தனியாரிடம் போகப் போகிறது; அப்படியிருக்கையில் பட்ஜெட் எதற்கு என்பதுதான். தற்போதுள்ள மோடி அரசின் முடிவின்படி, மிக விரைவில் உலகப்புகழ்பெற்ற பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்), கபுர்தலா ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை உள்பட பல உற்பத்தி பிரிவுகளும் பொன்மலை ரயில் என்ஜின் ஆலை, சித்தரஞ்சன் லோகோ ஆலை உள்ளிட்டவையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இதில் ரயில்வே பணிமனைகளும் அடங்கும். இவை அனைத்தும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு முன்பு இந்தியன் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி என்ற பெயருக்கு மாற்றப்படும். ஒவ்வொரு உற்பத்தி பிரிவிலும் தனியார்நிறுவனங்களைப் போல் சிஇஓ அதவாது தலைமை செயல் அதிகாரிஇருப்பார். இவர் பணி லாபத்தை நோக்கிநிறுவனங்களை நடத்துவதே. அதற்குஅவர் ஆட்குறைப்பு உட்பட என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
இதுமட்டுமல்ல, மோடி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறிய மூன்றே நாட்களில், அதாவது 3.6.2019 அன்று  ரயில்வேக்கு சொந்த மாக சென்னை இராயபுரம் உள்பட நாடு முழுவதும் உள்ள 5  அச்சகங்களை மூடிவிடவும் அதில் உள்ள எந்திரங்களை விற்றுவிடவும் முடிவு செய்தது. ரயில்வே அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களை மாற்று இடங்களில் நியமிக்கவும் அச்சக வேலைகளை தனியார்மயமாக்கவும் உத்த ரவிட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக  ரயில்வே பள்ளிகளும் ரயில்வே மருத்துவமனைகளும் மூடப்படும் அபா யம் உள்ளது என்று எச்சரிக்கிறார் ஆர்.இளங்கோவன். ஏற்கனவே இந்த இரண்டையும் மூடும்படி விவேக் தேவ்ராய் கமிட்டி மோடி அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. பள்ளிகளில் மாணவர்களை இனி சேர்க்கவேண்டாம் என்று ஒருமுறை சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது. பின்னர் ரயில்வே தொழிற் சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. ரயில்வே தனியார்மயமாகும் போது பாதி ரயில்வே ஊழியர்கள் ‘உபரி’ ஆவார்கள். இதை அமல்படுத்தும் திட்டம் இருப்பதால்தான் ஏற்கனவே மோடி அரசு புதிதாகவேலைக்கு ஆட்களை எடுக்காமல் 1லட்சம்ஓய்வூதியதாரர்களை ரயில்வேயின் பல்வேறு பணிகளில்  நியமித்துள்ளது. ஊழியர்களே உபரி ஆகும் போது, ஓய்வு பெற்றவர்களும் நீக்கப்படுவார்கள்.எனவே ரயில்வே  பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களை பாதுகாக்கவும்  மோடி அரசின் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தவும் அரசியல் கட்சிகளும் ரயில்வே தொழிற்சங்கங்களும் நாட்டு மக்களும் இனி போராடவேண்டிய கட்டா யத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

;

Rumours regarding rolling back of the retirement age from 60 to 58.

Rumours regarding rolling back of the retirement age from 60 to 58.

CHQ is getting a lot of queries with regards to the rumours about reduction of the retirement age from 60 to 58. CHQ is aware that serious discussions are going on at the government level, on this matter. BSNLEU, in it’s letter, written to Shri Ravi Shankar Prasad, Hon’ble MoC & IT on 06.06.2019, has demanded that the assurance given by the government, at the time of formation of BSNL, should be honoured. The assurance given in the year 2000, about retirement age is that, only Government Rule would be made applicable to BSNL. As per the existing government rule, retirement age is 60. We hope that the government will honour it’s assurance given in the year 2000. Hence, we request the members not to get panicky.

[Date : 21 - Jun - 2019]

Nomination of circle and SSA level.......



Nomination of circle and SSA level representatives- circle secretaries are requested to note please.

View File
As per the Corporate Office letter on 8th Membership Verification, the General Secretary of BSNLEU has to submit the list of it’s circle representatives, by 15.07.2019, to the CGMs. The GS, BSNLEU, has submitted this list to the Corporate Office today. Copy of this letter is sent to the circle secretaries by Whatsapp also. All the circle secretaries are requested to hand over a copy of this letter to their concerned CGM. Further, the circle secretaries are also requested to nominate the SSA level representatives to the concerned SSA Head. 

[Date : 21 - Jun - 2019]

BSNLEU applied for Membership Verification.




BSNLEU applied for Membership Verification.

View File
The 8th Membership Verification is to take place on 16.09.2019. BSNLEU has submitted it’s application to the Management on 17.06.2019, for participating in this Membership Verification. This is the intimation to all the circle and district unions, with the request to get prepared for the campaign.

[Date : 21 - Jun - 2019]

Thursday 20 June 2019

GM(Rectt) உடன் BSNL ஊழியர் சங்கம் சந்திப்பு




GM(Rectt) உடன் BSNL ஊழியர் சங்கம் சந்திப்பு
BSNL ஊழியர் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் தோழர் சுவபன் சக்கரவர்த்தி அவர்கள் 17.06.2019 அன்று GM(Rectt) திருமிகு சமிதா லூத்ரா அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தார். 

JTO LICE தேர்வு முடிவுகள்:- 26.05.2019 அன்று நடைபெற்ற 2017-18ஆம் ஆண்டிற்கான JTO LICE தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்து, தவறான/ பல சரியான மற்றும் குழப்பமான பதில்களை கொண்டிருக்கும் கேள்விகளுக்கும், பாடப்பகுதிக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் முழுமையான மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்க வேண்டும் என நமது சங்கத்தின் சார்பில் கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த GM(Rectt) அவர்கள் STANDARD OPERATION PROCEDURE படி கேள்வித்தாள் குறித்த ஊழியர்களின் குறைகள் தொடர்பாக பரிசீலிக்க நிபுனர் குழு ஒன்றை ஏற்கனவே அமைத்து விட்டதாக தெரிவித்தார். BSNL ஊழியர் சங்கம் கொடுத்துள்ள விவரங்களை அந்த நிபுனர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு குறைந்த கால அளவிற்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

TT LICE தேர்விற்கான கட்டணம் திரும்ப பெற வேண்டும்:- 08.09.2019 அன்று நடைபெற உள்ள TT LICE தேர்விற்கு நிர்வாகம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளதை திரும்ப பெற வேண்டும் என்றும், கடந்த காலங்களில் இம்மாதிரியான தேர்வு கட்டண முறை இருந்ததில்லை என்றும் நமது சங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பிரச்சனையில் தலையிட்டு கவனிப்பதாக GM(Rectt) உறுதி அளித்துள்ளார்.

JE இலாகா தேர்விற்கான தேதியை அறிவிக்க வேண்டும்:- JE இலாகா தேர்வினை OFF LINE மூலமாக நடத்த வேண்டும் என்கிற BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கையினை நிர்வாகம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டது. எனினும் தேர்விற்கான தேதியினை கார்ப்பரேட் அலுவலகம் இன்னமும் இறுதி செய்யாமல் உள்ளது. இந்த பிரச்சனையை நமது சங்கத்தின் சார்பாக முன் வைத்த போது, அதற்கன பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், அனேகமாக ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேர்வு நடைபெறும் என்றும் GM(Rectt) தெரிவித்தார். 

Com. Swapan Chakraborty, Dy.GS, BSNLEU, met


Com. Swapan Chakraborty, Dy.GS, BSNLEU, met Ms. Samita Luthra,GM(Rectt.) yesterday the 17-06-2019 and discussed on the following issues:-

Review of the JTO LICE 50% exam for the vacancy year 2017-18, held on 26.05.2019, and to award full marks for the wrong/multiple/ambiguous answers or out of syllabus questions.

The GM (Rectt.) informed that the Management had already set up an experts committee, to review the grievances in respect of the JTO LICE for 2017-18 as per the SOP (Standard Operating Procedure). She further informed that the documents given by BSNLEU would be referred to the experts committee, for consideration. The whole process will be completed within a short time.

Withdrawal of the decision to levy fee for the TT LICE.
As regards the withdrawal of the decision of the Management for levying exam fee for the Telecom Technician LICE, to be held on 08.09.2019, the Dy.GS informed the GM (Rectt.) that, no exam fee for TT LICE was imposed in the earlier exams and it should not be imposed this time also. The GM (Rectt.) assured to look into the matter.

Announcement of the date for the JE LICE off line exam.
The BSNL Management has already accepted BSNLEU's proposal to hold the TT LICE as an offline exam. However, the date for the exam is yet to be finalised by the Corporate Office. This issue was also discussed yesterday. The GM (Rectt.) informed that the process is in the final stage and hopefully the exam may be tentatively held in August, 2019.

[Date : 18 - Jun - 2019]

Monday 17 June 2019

சிறப்பு கருத்தரங்கம்.



வெனிசுலாவின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதலை கண்டித்து நாகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்.
கோவையில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழுவில் வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா ஏகாதிபத்தியம் தொடுத்துள்ள தாக்குதலுக்கு எதிரான கருத்தரங்கங்களை தமிழகத்தில் நாகர்கோவில், சென்னை, கோவை மற்றும் மதுரையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன் முதல் நிகழ்வாக நாகர்கோவில் 15.06.2019 அன்று அந்த கருத்தரங்கம் நாகர்கோவில் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் K.ஜார்ஜ் தலைமையில் மிகச்சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 150க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். நாகர்கோவில் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் செயலாளர் தோழர் P.ராஜு வரவேற்புரை நிகழ்த்தினார். BSNL ஊழியர் சங்கத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் தோழர் N.சூசை மரிய அந்தோணி அவர்களும், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் S.பன்னீர் செல்வம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். 
அதன் பின்னர் மாநில தலைவரும், அகில இந்திய உதவி பொதுச்செயலாளருமான தோழர் S.செல்லப்பா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது சிறப்புரையில், வெனிசுலாவின் வரலாற்றையும் தற்போது அங்கு நிலவும் சூழ்நிலை தொடர்பாகவும், தற்போது அந்நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்து வரும் தாக்குதல் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள சூழல் இந்திய தொழிலாளி வர்க்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது தொடர்பாகவும், இது போன்ற கருத்தர்ங்கங்களை ஏன் BSNL ஊழியர் சங்கம் நடத்துகிறது என்பவற்றையும் தெளிவாக விளக்கி பேசினார். கன்னியாகுமரி மாவட்ட JCTU தலைவர் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தனது சிறப்புரையில் வெனிசுலாவில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலையும், இந்திய தொழிலாளி வர்க்கம் நடத்த வேண்டிய எதிர்கால போராட்டங்கள் தொடர்பாகவும் விவரித்தார். BSNL ஊழியர் சங்கத்தின் நாகர்கோவில் மாவட்ட பொருளாளர் தோழர் ஆறுமுகம் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். வெற்றிகரமான இந்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்த நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட சங்கங்களையும், சிறப்புரையாற்றிய தலைவர்களுக்கும் தமிழ் மாநில சங்கம் தனது மனமார்ந்த பாராட்டுதல்களை உரித்தாக்கிக் கொள்கிறது.

BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு





BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு பூனே நகரில் நடைபெற உள்ளது.
பூனேவில் உள்ள மாலுங்கே பகுதியில் உள்ள விப்ஜியார் சர்வதேச பள்ளிக்கு அருகில் உள்ள எமரால்ட் மல்டி பர்ப்பஸ் ஹாலில் BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு ஜூலை மாதம் 29 முதல் 31 வரை நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்களும் பயணத்திற்கான முன்பதிவை செய்து மாநில சங்கத்திற்கு தகவல் தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

Saturday 1 June 2019

once again!!!!!!?!!!





Shri Ravi Shankar Prasad once again takes over as the Minister of Communications..

Shri Ravi Shankar Prasad, an eminent lawyer and a seasoned politician, has once again taken over as the Hon’ble Minister of Communications. He had held the portfolio of Communications earlier also, from 2014, till Shri Manoj Sinha succeeded him. Shri Ravi Shankar Prasad was the first Communications Minister, who showed the courage to take on the private companies, on the call drop issue. Being a senior leader of the ruling BJP, Shri Ravi Shankar Prasad is known for boldly implementing his decisions. We hope that the Hon’ble Minister will certainly overcome the present roadblocks being created by the bureaucrats sitting in the DoT, in the matter of revival of BSNL. BSNLEU, heartily congratulates Shri Ravi Shankar Prasad, and assures it’s fullest cooperation to achieve the revival of BSNL.

[Date : 01 - Jun - 2019]

அங்கீகார விதிகளில் மாற்றம்



அங்கீகார விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென BSNLEU மற்றும் NFTE சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் கூட்டாக BSNL CMDஐ சந்தித்து கோரிக்கை.
டிசம்பர் 17 முதல் 20வரை மைசூருவில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் 9வது அகில இந்திய மாநாட்டில், ”முதல் சங்கம் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கியது என்றாலும் கூட இரண்டாவது சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற திருத்தத்தை அங்கீகார விதிகளில் கொண்டு வர வேண்டும்” என்கிற தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அந்த மாநாடு முடிந்த உடனே நமது மத்திய சங்கம் அந்த தீர்மானத்தின் நகலை BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோரிடம் வழங்கியதுடன், அங்கீகார விதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துக் கொண்டுள்ளது. எனினும் நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் 27.05.2019 அன்று NFTEயின் பொதுச்செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங் அவர்களுடன் BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா அவர்களை சந்தித்த BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் BSNL ஊழியர் சங்கம் கோரியபடி தேவையான திருத்தங்களை அங்கீகார விதிகளில் உடனடியாக கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தியதோடு அதற்கான மற்றொரு கடிதத்தையும் CMD BSNLஇடம் வழங்கினார்.