Wednesday 3 July 2013

பெருநகரங்களில் கொள்ளை லாபம் : 4 ஆயிரம் கோடி பேரம் பேசும் வோடபோன்

பெருநகரங்களில் கொள்ளை லாபம் : 4 ஆயிரம் கோடி பேரம் பேசும் வோடபோன்

புதுதில்லி, ஜூலை 2 -தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் மொபைல் உரிமங்கள் மற் றும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறுவதற்கு அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி அளிக்கத் தயாராக இருப்பதாக வோடபோன் நிறுவனம் கூறியுள்ளது. மேற்கண்ட உரிமங்கள் இயல்பாக நீட் டிக்கும் தன்மையை தொலைதொடர்புத்துறை மறுத்திருந்தது. மொபைல் சேவையை அளிக்கும் நிறு வனம் ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தின் மூலமே பெற வேண்டும் என அறிவுறுத்தி யிருந்தது.இதன் அடிப்படையில் வோடபோன் நிறுவனம் இந்திய அரசுடன் கொண் டிருந்த சர்ச்சையை முடி வுக்கு கொண்டு வர ரூ.4 ஆயிரம் கோடி அளிக்க தயாராக உள்ளது.இதுதொடர்பாக வோடபோன் நிறுவனம் தொலை தொடர்புத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் பரஸ்பரஆலோசனை அடிப்படையில் எங்களது உரிமங்களை நீட்டிக்க வேண்டும். கொல்கத்தாவில் ஸ்பெக்ட்ரத்தை பெற ரூ.600 கோடியும் தில்லி மற்றும் மும்பை பகுதிகளில் ஸ்பெக்ட்ரத்தை பெற தலா ரூ.1700 கோடியும் அளிக்க தயாராக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 2010ம்ஆண்டில் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையான 3ஜி ஸ்பெக்ட்ரத்தை பெறுவதற் கான முன் நிர்ணய விலை யை காட்டிலும் தற்போது இரு மடங்கு கூடுதல் தொகையை தந்து அதன் உரிமங்களை பெறுவதற்கு வோடபோன் துடிக்கிறது.இதன் மூலம் தொலை தொடர்பு சேவையில், குறிப் பாக மொபைல் சேவையில் முதலீடு செய்த தொகைக்கு பல மடங்கு அதிக லாபம் ஈட்டலாம் என்று ருசி கண்ட வோடபோன் போன்ற தனியார் தொலை பேசி நிறு வனங்கள் மொபைல் சேவைக்கான மொபைல் உரிமம் மற்றும் ஸ்பெக்ட் ரத்தைப் பெற தீவிரம் காட்டுகின்றன. 1900 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெறு வதற்கு தற்போது வோட போன் நிறுவனம் 3ஆண்டு முன்னர் செலுத்திய முன் நிர்ணய விலையைக்காட் டிலும் 1.3 மடங்கு அதிகம் விலை தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறது.இருப்பினும் இது தொலைதொடர்புத்துறை ஏற்கனவே நிர்ணயித்த அடிப் படை விலையைக்காட்டி லும் குறைவாகும். தில்லியில் ஒரு யூனிட் ஸ்பெக்ட்ரத் திற்கு ரூ.485கோடி செலுத்த வேண்டும். இதன் படி வோடபோன் நிறுவனம் 10 மெகாஹெர்ட்ஸ் அலைக் கற்றையைப்பெறுவதற்கு தில்லிக்கு மட்டும் ரூ.4ஆயி ரத்து 850 கோடி செலுத்த வேண்டும் என்பது கவனிக் கத்தக்கது.

No comments:

Post a Comment