Sunday 20 October 2013

யார் தீயன்?

யார் தீயன்?

சாலையோரத்தில் இருக்கும் வீட்டில் உள்ளவர்களைக் காப்பதாகாக் கூறி அ என்னும் ஒருவர் அவிவீட்டிற்குள் புகுந்தார். அவரின் எதிரியான ஆ. அ என்பவரை விரட்டுவதற்காக, அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த இ என்பவருக்கு துப்பாக்கி ஒன்றைக் கொடுத்தார். இயும் அந்தத் தூப்பாக்கியைக் கொண்டு அவிடம் சண்டை போட்டார். ஒரு நாள் அ அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அப்பொழுது ஆ, இயின் வீட்டிலும் பக்கத்து வீடுகளிலும் இருக்கும் புதையலைக் கவரவே ஆ தன்னைப் பயன்படுத்தியுள்ளார் என்பது புரிந்தது. எனவே ஆ கொடுத்த துப்பாக்கியை அவருக்கு எதிராக இ திருப்பினார். ஆவுக்கும் இக்கும் சண்டைகள் நடந்தன. அந்த ஊரில் தான் மட்டுமே பெரிய பலசாலி என முண்டா தட்டிய ஆவின் முகத்தில், எதிர்பாராத வேளையில் இ ஓங்கி ஒரு குத்துவிட்டு ஆவின் மூக்கை உடைத்துவிட்டார். பின்னர் பக்கத்துத் தெருவிலிருந்த ஈயின் வீட்டிற்குப் போய் இ பதுங்கிக் கொண்டார். ஈ. ஆவுக்கு நண்பர்தான் என்றாலும் அவர் இயை ஆவுக்குக் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனால், ஈயின் வீட்டில் இ பதுங்கி இருப்பதை மோப்பம் பிடித்த ஆ, ஈக்குத் தெரியாமல் அவரது வீட்டிற்குள் புகுந்து இயைக் கொன்றுவிட்டார். இப்பொழுது சொல்லுங்கள், உண்மையில் யார் தீயன்? (Villan)

No comments:

Post a Comment