Wednesday 4 September 2013

ஒப்பந்த ஊழியர்களின் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் (06-09-2013 )




06/09/2013. அன்று ஒப்பந்த ஊழியர்களின் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் 



பெரும்பாலான மாநிலங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு,குறைந்தபட்ச ஊதியம் கார்ப்பரேட் அலுவலகஉத்தரவுப்படி வழங்கப்படுவது இல்லை மேலும் அவர்களது ஊதியங்கள்,பணியாளர் வருங்கால வைப்புநிதி & ஈஎஸ்ஐ பங்களிப்புகளின் ஒரு கணிசமான பகுதி ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நேர்மையற்றஅதிகாரிகள்  மூலம் சூறையாடப்படுகின்றன. . தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள், பணியாளர் வருங்காலவைப்பு நிதி & ஈஎஸ்ஐ சலுகைகள் கோரி, போராட்டத்தில் செல்லும் போது, அவர்கள் இரக்கமற்று வேலைநீக்கம் செய்யபடுவது பல மாநிலங்களில் நடக்கிறது. கார்ப்பரேட் அலுவலகத்தின் கவனத்திற்கு இதைகொண்டு சென்ற BSNLEU எடுத்த அனைத்து முயற்சிகளும், செவிடன் காதில் ஊதிய சங்காய் உள்ளதால் , 26.08.2013 அன்று நடைபெற்ற BSNLEU, மத்திய செயலக கூட்டம் பல்வேறு மாநிலங்களில் வேலை நீக்கம்செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும் எடுக்க கோரி, 06.09.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தமுடிவு செய்துள்ளது , BSNLEU மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் குறைந்தபட்ச ஊதிய மீது கார்ப்பரேட்அலுவலகம் உத்தரவுகளை செயல்படுத்த வேலை நீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும்எடுக்க   சக்தி மிகுந்த ஆர்ப்பாட்டம் 06-09-2013 அன்று  நடத்த வேண்டும்.

No comments:

Post a Comment