Saturday 29 June 2013

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கதின்  தமிழ்நாடு  மாநில செயற்குழு கூட்டம்தோழர்.மாரிமுத்து  மாநிலதலைவர் தலைமையில் 29.06.2013 அன்று  நடைபெற்றது .
மாநில செயற்குழுவை  தோழர் P .அபிமன்யு , பொதுசெயலர்  அவர்கள் தொடக்கி வைத்தார் .மாநில செயலர் தோழர் S .செல்லப்பா அவர்கள் நடவடிக்கை அறிக்கையை சமர்பித்தார் .தோழர் .K .கோவிந்தராஜன் , மாநில செயலர் சென்னை தொலை பேசி  அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் .பொது செயலர் P .அபிமன்யு  அவர்கள் பேசுகையில்  6வது  சரிபார்ப்பு தேர்தலில் நமது  வெற்றியின்  சிறப்பம்சங்களையும்,78,2%IDA  . இணைப்பு வெற்றியில் BSNLEU  சங்கத்தின் முக்கிய   பங்கையும் விவரித்தார் 6 வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பின் புதிய சூழல் உருவாகி உள்ளதையும் அவர் சுட்டி  காட்டினார் .  ..பிஎஸ்என்எல் திறன் மேம்படுத்த நாடுதழுவிய பிரசாரம் நடத்த JOINT  FORUM  முடிவு செய்து வரும் 03.08.2013 அன்று புதுதில்லியில்  தேசிய கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக கூறினார். 03-07-2013 முதல் நெய்வேலி  ஊழியர்கள் பங்கு   விற்பனைக்கு எதிராக செய்யவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு  ஆதரவாக 04-07-2013 அன்று அனைத்து  கிளைகளிலும்ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது 


No comments:

Post a Comment