Sunday 3 September 2017

மாணவி அனிதாவுக்கு ஆழ்ந்த இரங்கல்:

மாணவி அனிதாவுக்கு ஆழ்ந்த இரங்கல்:



மனசு வலிக்குதுய்யா!!!

நீட்டுக்கு
விலக்கு
கேட்டாய்…

நீதிமன்றத்தில்
வழக்கு
போட்டாய்…

நீதியுரை
உரக்கக்
கேட்டாய்…

என்ன செய்ய…

ஏழைச் சொல்
எட்டவில்லை…

அம்பானி
வீட்டு
பெண்ணாய்
இருந்தால்…

அமீத்ஷா
வந்து
பேசியிருப்பார்…

பிரியங்கா
சோப்ரா
பிரச்சனை
என்றால்

பிரதமரே
பிரத்யோக
கவனம்
காட்டியிருப்பார்…

நீ எங்கள்
அன்றாடம்
காய்ச்சி
பிள்ளையாச்சே…

அதிலும்
ஆதிதிராவிட
கிள்ளையாச்சே…

அதனால்தான்…

உன் அழுகுரல்
அம்பலத்தில்
ஏறவில்லை…

அத்தனை
செவிகளும்
செவிடாகிப்
போயின…

சட்ட
சுத்திகளும்
நீதியை
பிரசவிக்க
மறுத்து

மலடாகிப்
போயின…

ஆனாலும்
எங்கள்
அறிவுக்களஞ்சியமே

நீ கட்டியது
உன் கழுத்துக்கு
சுருக்கல்ல…

காவிக்கட்சிக்கு
கல்லறை
என்பது மட்டும்
சத்தியம்…

ஆணவத்து
மோடி அலட்சியம்

மாணவத்திடம்
அழியும் நிச்சயம்…

அனிதா
மரணம்

மனிதா
உன் புரட்சியின்
ஜனனம்…

No comments:

Post a Comment