Sunday 3 September 2023

BSNL WWCC METTING


2 நாட்கள் நடைபெறும் BSNL WWCCயின் விரிவடைந்த கூட்டம், புது டெல்லியில், 02.09.2023 அன்று துவங்கியது.
2 நாட்கள் நடைபெற உள்ள BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், 02.03.2023 அன்று காலை 11.00 மணிக்கு துவங்கியது. புதுடெல்லி K.G.போஸ் பவனில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, மத்திய சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் ரமா தேவி தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அகில இந்திய அமைப்பாளர் தோழர் K.N.ஜோதி லட்சுமி, வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்திய, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, ஊதிய மாற்றம், BSNLன் 4G / 5G துவக்குவதில் உள்ள கால தாமதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் நிலை பற்றி உரையாற்றினார். BSNL நிறுவனம், நஷ்டமையும் நிறுவனமாக மாறுவதற்கு காரணமான, BSNLஐ பாரபட்சமாக நடத்தும், அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாகவும் அவர் விரிவாக பேசினார்.

உணவு இடைவேளைக்கு பின், பங்கேற்ற தோழர்கள், தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment