Sunday 4 April 2021

சர்வதேச டெண்டர்

 சர்வதேச டெண்டர் மூலம் BSNL நிறுவனம், 4G கருவிகளை வாங்க அனுமதிப்பது என ETG முடிவு.

BSNL நிறுவனத்தின் 4G சேவைகள் துவங்குவது, கடுமையாக தாமதமாக்கப்பட்டு வருகின்றது. 4Gக்கான கேந்திரமான கருவிகளை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே BSNL வாங்க வேண்டும் என்கிற மத்திய அரசின் நிலைபாடுதான், BSNLன் 4G சேவைகள் துவக்கத்தை தாமதப்படுத்தி வருகின்றது. இந்த தாமதம், BSNL மற்றும் அதன் ஊழியர்களின் எதிர்காலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனையை, BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக, மத்தியதொலை தொடர்பு அமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றது. சமீபத்தில் கூட, 4G கருவிகளை வாங்க BSNL நிறுவனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என அரசாங்கத்தை வற்புறுத்தி, நாடுமுழுவதும், BSNL ஊழியர் சங்கம் தெருமுனை பிரச்சாரங்களை நடத்தியுள்ளது.

இந்த பின்னணியில், இந்த பிரச்சனை தொடர்பாக, 30.03.2021 அன்று, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, CMD BSNL இடம் விவாதித்தார். விவாதத்தின் போது, சர்வதேச தயாரிப்பாளர்களான, நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 4G கருவிகளை வாங்க, பாரத பிரதமரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதன்மை ஆலோசகர் திரு விஜய ராகவன் தலைமையிலான EMPOWERED TECHNOLOGY GROUP (ETG), BSNLக்கு அனுமதி வழங்கியுள்ளதாக CMD BSNL தெரிவித்தார். இதற்கு தேவையான டெண்டர்களை விடும் பணிகளை, BSNL எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உண்மையில், இது வரவேற்கத்தக்க அம்சம். இது BSNL நிறுவனத்திற்கு ஒரு நிம்மதி பெருமூச்சை கொடுக்கும். எனினும், புதிய டெண்டர்கள் மூலம் கருவிகளை வாங்கி 4G சேவையை வழங்க BSNLக்கு, குறைந்த பட்சம் ஒரு வருட காலம் ஆகும்.

No comments:

Post a Comment