Sunday 1 January 2017

நமது BSNLEU-AIC சிறப்பான பொது அரங்கு


நமது BSNLEU-AIC சிறப்பான பொது அரங்கு ...

அருமைத் தோழர்களே ! நமது மத்திய சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாடுஎழுச்சியுடன், 31.12.2016 துவங்கியதுமுதல்நிகழ்வாக தேசிய கொடியை அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர்சிங் ஏற்றி வைக்கநமது சங்க கொடியை பொது செயலர் தோழர் P.அபிமன்யூவிண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றிவைத்தார்.
இந்திய தொழிற்சங்கங்களின் மூத்த தோழரும்நமது புறவலூருமான தோழர் V.A.N. நம்பூதிரி தியாகிகள் அஞ்சலி செலுத்தும் விதமாகதியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி செலித்தியவுடன்அனைவரும் அஞ்சலி செலுத்தினர்வரவேற்பு குழு சார்பாகஅகில இந்திய உதவிபொது செயலர் தோழர் S . செல்லப்பா அனைவரையும் வரவேற்றார்வரவேற்பு குழு தலைவரும்மாநிலங்கவைஉறுப்பினருமான  தோழர் T .K .ரங்கராஜன்அனைவரையும் வரவேற்றுசிறப்புரை வழங்கினார்.
தோழமை சங்கங்கள் சார்பாக NFTEBSNL பொது செயலர் தோழர் சந்தேஷ் வர் சிங் மாநாட்டில் கலந்து கொண்டுவாழ்த்துரைவழங்கினார். NUBSNLWU(FNTO) தலைவர் தோழர் ஜெயபிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்.
SNEA தலைவர் தோழர் G.L.ஜோகி, AIBSLEA தலைவர் தோழர் சிவகுமார், BSNLMS பொது செயலர் தோழர் சுரேஷ் குமார், TEPU  தலைவர்   தோழர்   A.செல்லபாண்டியன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 
நம் அழைப்பை ஏற்று CMD, BSNL மாநாட்டிற்கு வருகை புரிந்தார்சேவை கருத்தரங்கம் துவங்கியதுபொது செயலரின் அறிமுகஉரைக்கு பின்நமது CMD திருஅனுபம் ஸ்ரீவத்சவா சிறப்புரை வழங்கினார்அவர் தம் உரையில், 01.01.2017 முதல் ஊழியர்களுக்குஊதிய மாற்றும் செய்வது உறுதி என பலத்த கரகோசங்களுக்கிடையே அறிவித்தார். 01.01.2017 முதல் BSNLல் அறிமுகப்படுத்தவுள்ளசலுகைகளையும் அறிவித்தார். . உணவு இடைவேளைக்காக மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுபின்னர்துவங்கிய நிகழ்ச்சி நிரலில், CITUதலைவர் தோழர் A .K .பத்மநாபன் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார்.






No comments:

Post a Comment